Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மப்டியில் இருந்த பெண் போலீசை கிண்டல் செய்த வாலிபர்: அப்புறம் என்ன செம விருந்து தான்!

மப்டியில் இருந்த பெண் போலீசை கிண்டல் செய்த வாலிபர்: அப்புறம் என்ன செம விருந்து தான்!
, வெள்ளி, 29 ஜூலை 2016 (09:09 IST)
உத்தரபிரேதச மாநிலம் சீதாபூரில் சாதாரண உடையில் இருந்த பெண் போலீசை கிண்டல் செய்த வாலிபரை அந்த போலீஸ் அடித்து உதைத்து கைது செய்த சம்பவம் அங்கு பரபரப்பாக பேசப்படுகிறது.


 
 
பெண் போலீஸ் ஒருவர் சாதாரண உடையில் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது பைக்கில் வந்த வாலிபர் ஒருவர் சிக்னலில் நிற்பதற்காக அங்கு நிறுத்தியுள்ளார். அப்போது அந்த வாலிபர் சாலையோரம் சென்ற அந்த பெண் போலீசை கிண்டல் செய்துள்ளார்.
 
வாலிபர் தன்னை கிண்டல் செய்வதை அறிந்த அந்த பெண் போலீஸ் அந்த வாலிபரை பைக்கில் இருந்து இறக்கி வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அப்போது அந்த வாலிபர் போலீசின் கையில் இருந்த மோதிரத்தை பறித்துள்ளார்.
 
வாலிபர் மோதிரத்தை பறித்ததும் ஆத்திரமடைந்த அந்த போலீஸ் அவரை சரமாறியாக தாக்கியுள்ளார். இதனையடுத்து அந்த பகுதியில் பொதுமக்கள் கூட்டம் கூடியது. தகவல் கிடைத்ததும் அந்த இடத்துக்கு விரைந்து வந்த காவல்துறை வாலிபரை கைது செய்தனர்.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து: முன்னாள் அமைச்சர் உள்பட 13 பேர் பலி