Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து: முன்னாள் அமைச்சர் உள்பட 13 பேர் பலி

பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து: முன்னாள் அமைச்சர் உள்பட 13 பேர் பலி

பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து: முன்னாள் அமைச்சர் உள்பட 13 பேர் பலி
, வெள்ளி, 29 ஜூலை 2016 (08:58 IST)
நேபாளத்தில் பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் முன்னாள் அமைச்சர் உள்பட 13 பேர் பலியாகியுள்ளனர்.


 


நேபாளத்தில் உள்ள தன்குடா மாவடத்தில் இருக்கும் தரண் என்ற இடத்திலிருந்து, வியாழக்கிழமை, 41 பேருடன் பேருந்து ஒன்று சன்குவாசபாவுக்கு கிளம்பிய பேருந்து, சிந்துவா பஜார் அருகே சென்றபோது, நிலைதடுமாறி 80 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் அந்த பேருந்தில் இருந்த முன்னாள் மாநில நிதி அமைச்சர் ஹரி ராஜ் கெவா உள்பட 7 பேர் சம்பவ இடத்திலேயே  பலியாகினர்.

காயமடைந்த 28 பேர் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அதில், 6 பேர் சிகிச்சை பலனின்றி பலியாகினர். 3 வயது பெண் குழந்தையும் இந்த விபத்தில் பலியாகியுள்ளார். பனிமூட்டம் காரணமாக இந்த விபத்து நடந்ததாக கூறுகின்றனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ரப்பர் தோட்டத்தில் தம்பதியரின் எலும்பு கூடு: அதிர்ச்சியில் கிராம மக்கள்