சபரிமலையில் கட்டுக்கடங்காத கூட்டம்.. கூட்ட நெரிசலில் சிக்கி பெண் பக்தை பரிதாப பலி..!

Siva
புதன், 19 நவம்பர் 2025 (08:27 IST)
கார்த்திகை மாதம் தொடங்கியதில் இருந்து சபரிமலை ஐயப்பனுக்கு மாலை அணிவித்து ஐயப்பனின் தரிசனம் செய்ய முயலும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகமாகி வருகிறது. 
 
இந்த நிலையில், சபரிமலையில் 10 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் தரிசனம் செய்து வரும் நிலையில், கட்டுக்கடங்காத கூட்ட நெரிசலில் சிக்கிய பெண் ஐயப்ப பக்தர் ஒருவர் உயிரிழந்தார் என்ற தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
 
கோழிக்கோடு பகுதியை சேர்ந்த அந்தப் பெண், பம்பையில் இருந்து நீலிமலை நோக்கி செல்லும் போது மயங்கி விழுந்ததாகவும், முதலுதவி அளித்தும் பலன் இல்லாமல் உயிரிழந்ததாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
 
இந்த நிலையில், கூட்ட நெரிசலை தவிர்க்கும் விதமாக பக்தர்களை நிலக்கல் பகுதியில் நிறுத்தி வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக சபரிமலை ஐயப்பன் தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நவம்பர் 27-ல் வங்கக் கடலில் மேலும் ஒரு தாழ்வு மண்டலம்! இந்திய வானிலை ஆய்வு மையம்

சீமான்தான் நம்பர் ஒன்!.. டிஜிட்டல் சர்வே மூலம் கிடைத்த ரிசல்ட்!..

வாக்காளர் பட்டியல் SIR படிவத்தை நிரப்ப ஏஐ தொழில்நுட்பம்: புதிய முயற்சி!

40 ஆண்டு அரசியல்.. 10 முறை முதல்வர்.. நிதிஷ்குமாரின் சொத்து மதிப்பு ரூ.1.64 கோடி, 13 பசுக்கள் தானா?

உலகிலேயே கஷ்டமில்லாத பணி கவர்னர் பணி.. கனிமொழி எம்பி கிண்டல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments