Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புளூகேம் விளையாட்டுக்கு அடிமையான பெண் வங்கி ஊழியர்: புதுவையில் பரபரப்பு

Webdunia
திங்கள், 4 செப்டம்பர் 2017 (07:05 IST)
ஆளைக்கொல்லும் ஆன்லைன் விளையாட்டான புளுவேல் விளையாட்டினால் இந்தியா உள்பட உலகில் பல உயிர்கள் இழந்து கொண்டிருக்கும் நிலையில் புதுவையில் புளூவேல் கேம் விளையாடிய பெண் வங்கி ஊழியர் ஒருவரை மீட்டு அவருக்கு போலீசார் கவுன்சிலிங் கொடுத்து வருகின்றனர்.



 
 
புதுவையில் ப்ரியா என்ற 23 வயது பெண் வங்கி ஊழியர் புளூவேல் விளையாட்டிற்கு அடிமையாக மனச்சோர்வுடன் இருப்பதாக அவரது தோழி புதுவை போலீசாருக்கு கொடுத்த தகவலை அடுத்து ப்ரியாவின் வீட்டுக்கு போலீசார் சென்ற போது அவரை காணவில்லை.
 
இதுகுறித்து ப்ரியாவின் பெற்றோரிடம் விசாரணை செய்தபோது நள்ளிரவு முழுவதும் பிரியா விழித்து இருந்ததாகவும், காலை முதல் பிரியாவை காணவில்லை என்றும் தெரிவித்தனர். மேலும் மேலும் கடந்த சில நாட்களாக பிரியா எப்போதும் செல்போனில் மூழ்கியபடியே இருப்பதாகவும், எந்த நேரமும் டென்‌ஷனாகவே அவர் இருப்பதாக தெரிவித்தனர்.
 
இதனையடுத்து விரைந்து செயல்பட்ட போலீசார் ப்ரியாவை கடற்கரை அருகே கண்டுபிடித்து அவருக்கு கவுன்சிலிங் கொடுத்து வருகின்றனர். சிலமணி நேரம் தாமதம் செய்திருந்தாலும் ப்ரியாவின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
 

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments