Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஒரு கோடி ரூபாய் கொடுத்து மருமகனை போட்டுத்தள்ளிய மாமனார் - தெலுங்னாவில் பரபரப்பு

ஒரு கோடி ரூபாய் கொடுத்து மருமகனை போட்டுத்தள்ளிய மாமனார் - தெலுங்னாவில் பரபரப்பு
, திங்கள், 17 செப்டம்பர் 2018 (15:16 IST)
அம்ருதா உயர்ந்த வகுப்பைச் சேர்ந்தவர் என்பதால், தாழ்ந்த வகுப்பைச் சேர்ந்த பினராயின் பெற்றோர் அவர்களின் திருமணத்தை எதிர்த்துள்ளனர். ஆனால் பெற்றோரின் எதிர்ப்பை மீறி  இருவரும்  திருமணம் செய்து கொண்டனர் என்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது.
  

தெலுங்னாவில் பினராய்- அம்ருதா ஆகிய இருவரும் கடந்த ஆறு மாதங்களுக்கு முன்னர்  காதல் திருமணம் செய்து கொண்டனர். இப்போது அம்ருதா 3 மாத கர்ப்பிணியாக உள்ளார்.

இந்நிலையில்,அவரது கணவரான  பினராய்  அம்ருதாவை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். இருவரும் மருத்துவமனை வாசலில் சென்றபோது அவர்களை பின்தொடர்ந்து வந்த நபர் ஒருவன், பினராயின் தலையில் இரும்புகம்பியால் பலமாக தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பித்து ஓடிவிட்டார்.  

அதனைத் தொடர்ந்து பினராயியை மருத்துவமனையில் சேர்த்தபோது, அவர் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இது தொடர்பான காட்சிகள் அனைத்தும் மருத்துவமனையில் இருந்த கண்காணிப்பு காமிராவில் பதிவாகியிருந்தது. இது குறித்து போலீசார் விசாரித்த போது , அம்ருதா உயர்ந்த வகுப்பைச் சேர்ந்தவர் என்பதால், தாழ்ந்த வகுப்பைச் சேர்ந்த  பினராயியை காதலித்தது, அம்ருதாவின் பெற்றோருக்கு பிடிக்கவில்லை. இதனால் அம்ருதா வீட்டிலிருந்து வெளியேறி பினராயியை  திருமணம் செய்து கொண்டனர்.
 
webdunia

இதனால் கோபமுற்ற அம்ருதாவின் அப்பா ஒரு கோடி ரூபாய் கொடுத்து கூலிப்படையை  ஏவி பினராயை கொன்றிருப்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது. இச்சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சாரிடான் மாத்திரை உள்பட இரண்டு மருந்து பொருட்களுக்கு உச்சநீதிமன்றம் அனுமதி