Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இப்ப இதான் ட்ரெண்டு.. மருமகனுக்கு புல்டோசர் தந்த மாமனார்! – உத்தர பிரதேசத்தில் நூதனம்!

Webdunia
ஞாயிறு, 18 டிசம்பர் 2022 (15:38 IST)
உத்தர பிரதேசத்தில் திருமணத்திற்கு வரதட்சணையாக புல்டோசர் வாங்கி தந்த சம்பவம் வைரலாகியுள்ளது.

உத்தர பிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் தலைமையில் பாஜக ஆட்சி நடந்து வருகிறது. சமீப காலமாக குற்ற செயல்களில் ஈடுபடுவோர் வீடுகளை புல்டோசரால் இடித்து தள்ளும் சம்பவங்கள் உத்தர பிரதேசத்தில் அதிகரித்துள்ளது. இதையொட்டி, யோகி ஆதித்யநாத்தையும், புல்டோசரையும் மையப்படுத்தி மீம்களும் உலாவின.

இந்த புல்டோசரை ட்ரெண்டை திருமணம் வரை கொண்டு சென்றுள்ளார் ஒருவர். உத்தர பிரதேசத்தின் ஹமீர்பூர் பகுதியை சேர்ந்த ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி பரசுராம் பிரஜாபதி. இவர் தனது மகளுக்கு சமீபத்தில் திருமணம் செய்து வைத்துள்ளார். திருமணத்திற்கு வரதட்சணையாக பொதுவாக கார் வழங்குவார்கள். ஆனால் பிரஜாபதி வித்தியாசமாக புல்டோசரை வாங்கி வரதட்சணையாக வழங்கியுள்ளார்.

இந்த புல்டோசர் புகைப்படங்கள் மற்றும் தகவல் சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.

Edit By Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முன்னாள் எம்.எல்.ஏ தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை.. அதிர்ச்சி சம்பவம்..!

குடும்பத்துடன் மது குடிக்கும் போராட்டம்.. தவெக அறிவிப்பால் பரபரப்பு..!

சென்னை கடற்கரை முதல் செங்கல்பட்டு வரை ஏசி ரயில்.. உத்தேச அட்டவணை இதோ..!

திராவிட மாடல் அரசைத் துரும்பளவு கூட அசைத்துப் பார்க்க முடியாது.. அமைச்சர் ரகுபதி

மீண்டும் தமிழகத்தில் அமலாக்கத்துறை சோதனை.. இந்த முறை எஸ்டிபிஐ நிர்வாகி வீடு..!

அடுத்த கட்டுரையில்
Show comments