Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

வலுக்கும் போராட்டம்: உண்ணாவிரதத்தை துவங்கிய விவசாயிகள்!

வலுக்கும் போராட்டம்: உண்ணாவிரதத்தை துவங்கிய விவசாயிகள்!
, திங்கள், 14 டிசம்பர் 2020 (10:23 IST)
வேளாண் சட்டங்களை திரும்பப் பெற கோரி டெல்லியில் போராடும் விவசாயிகள் உண்ணாவிரத போராட்டத்தை துவங்கினர். 
 
மத்திய அரசின் வேளாண்மை சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த 19 நாட்களாக விவசாயிகள் டெல்லியில் போராட்டம் செய்து வருகின்றனர். குறிப்பாக டெல்லி ஹரியானா பஞ்சாப் மற்றும் ராஜஸ்தான் மாநில விவசாயிகளின் போராட்டம் மிகப்பெரிய அளவில் இருந்து வருகிறது. 
 
விவசாயிகள் மற்றும் மத்திய அரசுகளுக்கு இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததை அடுத்து போராட்டம் தற்போது தீவிரமாக வலுத்து வருகிறது. இந்நிலையில் வேளாண் சட்டங்களை திரும்பப் பெற கோரி டெல்லியில் போராடும் விவசாயிகள் தங்களது போராட்டத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்லும் விதமாக  உண்ணாவிரத போராட்டத்தை இன்று முதல் துவங்கியுள்ளனர். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தொடரும் கந்துவட்டி கொடுமை; குடும்பமே தற்கொலை செய்து கொண்ட சோகம்!