Webdunia - Bharat's app for daily news and videos

Install App

போராட்டத்தை ஒடுக்க நினைச்சா பயிர்களை எரிப்போம்! – விவசாய அமைப்புகள் எச்சரிக்கை!

Webdunia
வெள்ளி, 19 பிப்ரவரி 2021 (12:30 IST)
வேளாண் சட்டங்களுக்கு எதிரான போராட்டங்கள் டெல்லியில் நடந்து வரும் நிலையில் போராட்டத்தை ஒடுக்க நினைத்தால் பயிர்களை அழித்து விடுவோம் என கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக பல்வேறு மாநில விவசாயிகள் டெல்லியில் கடந்த சில மாதங்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் சமீபத்தில் ட்ராக்டர் பேரணியின்போது ஏற்பட்ட வன்முறை தேசிய அளவில் அதிர்வுகளை ஏற்படுத்தியது.

இந்நிலையில் போராட்டம் குறித்து பேசியுள்ள சம்யுக்த் கிசான் மோர்ச்சா என்ற விவசாய அமைப்பின் தலைவர் ராகேஷ் சிங் திவைத் ”இரண்டு மாதங்களில் போராட்டம் முடிந்துவிடும் என்று நினைக்க வேண்டாம். பயிர் விலைகள் உயர்த்தப்படவில்லை. ஆனால் பெட்ரோல் டீசல் விலை உயர்ந்து கொண்டே செல்கிறது. இப்படியே மத்திய அரசு செயல்பட்டுக் கொண்டிருந்தால் தேர்தல் நடக்க உள்ள மேற்கு வங்கத்திற்கும் போராட்டத்தை நீட்டிப்போம். அரசு எங்கள் போராட்டத்தை முடக்க நினைத்தால் பயிர்களை எரித்து விடுவோம்” என கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பயத்தில் மசோதாக்களுக்கு கவர்னர் ரவி ஒப்புதல் அளித்துள்ளார்: முதல்வர் ஸ்டாலின்

அயோத்தியில் 2ஆம் கட்ட கும்பாபிஷேக பூஜைகள் தொடக்கம்: பக்தர்களுக்கு கட்டுப்பாடு..!

பங்குச்சந்தை இன்று மீண்டும் சரிவு.. இன்றைய சென்செக்ஸ், நிப்டி நிலவரம்..!

இந்த வாரத்தில் 2வது நாளாக உயரும் தஙக்ம் விலை.. சென்னையில் ஒரு சவரன் எவ்வளவு?

அரசு பேருந்துகளின் கட்டணம் உயர்த்தப்படுகிறதா? அமைச்சர் சிவசங்கர் விளக்கம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments