Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மூட்டை மூட்டையாக தக்காளியை குப்பையில் போட்ட விவசாயிகள்: அதிர்ச்சி தகவல்..!

Advertiesment
மூட்டை மூட்டையாக தக்காளியை குப்பையில் போட்ட விவசாயிகள்: அதிர்ச்சி தகவல்..!
, சனி, 22 ஜூலை 2023 (09:11 IST)
தக்காளி ஒரு கிலோ 100 ரூபாய் முதல் 150 ரூபாய் வரை விற்பனை ஆகி வரும் நிலையில் தெலுங்கானா மாநிலத்தில் விவசாயிகள் சிலர் மூட்டை மூட்டையாக தக்காளியை குப்பைத் தொட்டியில் போட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது 
 
தக்காளி விலை உயர்ந்து கொண்டே வருவதை அடுத்து அதிக லாபம் சம்பாதிக்கலாம் என தக்காளியை ஒரு சில விவசாயிகள் பதுக்கி வைத்திருந்ததாகவும் ஆனால்   கவனிக்காமல் விடப்பட்டதை அடுத்து அந்த தக்காளிகள் அனைத்தும் அழுகி விட்டதாக கூறப்படுகிறது. 
 
இதனை அடுத்து வேறு வழியின்றி மூட்டை மூட்டையாக தக்காளியை குப்பை தொட்டியிலும் கால்நடைகளுக்கு உணவாகவும் போட்டதாக செய்திகள் வெளியாகி உள்ளது. 
 
அழுகிய தக்காளிகள் மூட்டை மூட்டையாக குப்பையில் இருந்த தை பார்த்து அந்த பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
 
Edited by Mahendran

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பாஜகவுடன் இணைந்து பணியாற்றுவோம்: கர்நாடகா முன்னாள் முதல்வர் அறிவிப்பு..!