Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாஜக மாணவர் அணி குடியுரிமை சட்டத்திற்கு எதிர்ப்பா??

Arun Prasath
வியாழன், 9 ஜனவரி 2020 (16:29 IST)
பாஜக மாணவர் அணியான ஏபிவிபி குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக போராட்டம் நடத்துவது போல் ஒரு புகைப்படம் இணையத்தில் வைரலாகி வரும் நிலையில் இதன் உண்மை தன்மை தெரியவந்துள்ளது.

குடியுரிமை திருத்த சட்டத்திற்கும் தேசிய குடிமக்கள் பதிவேட்டுக்கும் எதிராக நாடு முழுவதும் போராட்டம் நடந்து வருகிறது. இதனிடையே நாடு முழுவதும் குடியுரிமை திருத்த சட்டம் குறித்தான சரியான புரிதலை மக்களுக்கு கொண்டு செல்ல பாஜக முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில் அசாம் மாநிலத்தில் பாஜகவின் மாணவர் அணியான ஏபிவிபி அமைப்பு குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக போராட்டம் நடத்தியதாக புகைப்படம் இணையத்தில் வைரலானது. இதனை தொடர்ந்து அப்புகைப்படம் மார்ஃபிங் செய்யப்பட்ட புகைப்படம் என தெரியவந்துள்ளது.

அந்த புகைப்படத்தை எடுத்த தனியார் பத்திரிக்கை புகைப்படக் கலைஞர் அன்செல்லா ஜமிந்தர், “ஏபிவிபி மாணவ அணியினர் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு ஆதரவாக ஆர்ப்பாட்டம் நடத்தியபோது இதை எடுத்தேன். ஆனால் தற்சமயம் இது மார்ஃபிங் செய்யப்பட்டுள்ளது என ஜமிந்தர் தெரிவித்துள்ளார். இதன் மூலம் இது போலியான செய்தி என தெரியவந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

அடுத்த கட்டுரையில்
Show comments