லட்டு கவுண்டர்களிலும் பேஸ் ரெககனைஷேசன்: திருப்பதி தேவஸ்தானம் அறிவிப்பு..!

Webdunia
புதன், 15 மார்ச் 2023 (11:20 IST)
திருப்பதியில் தங்குவதற்கு அறை வாடகைக்கு எடுக்கும் பக்தர்கள் பேஸ் ரெககனைஷேசன் மூலம் சோதனை செய்யப்படுவார்கள் என்றும் அறையை வாடகைக்கு எடுத்தவரே தான் காலி செய்ய வேண்டும் என்றும் அப்போதுதான் டெபாசிட் பணம் திரும்ப தரப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. 
 
இந்த நிலையில் தற்போது திருப்பதியில் சுவாமி தரிசனம் செய்த பக்தர்களுக்கு லட்டு வழங்கும் கவுண்டர்களிலும் பேஸ் ரெககனைஷேசன் செய்யப்படும் என்று திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது. 
 
இலவச லட்டு டோக்கன் வழங்குவதில் குளறுபடி ஏற்பட்டுள்ளதை அடுத்து அதை தவிர்ப்பதற்காக இலவச லட்டு டோக்கன் கவுண்டர்களிலும் பேஸ் ரெககனைஷேசன் டெக்னாலஜியுடன் கூடிய கேமரா பொருத்தப்படும் என்று திருமலை திருப்பதி தேவஸ்தான அதிகாரி தெரிவித்துள்ளார். 
 
இதனால் ஒரு பக்தர் ஒரே நாளில் ஒன்றுக்கு மேற்பட்ட முறையில் இலவச லட்டுக்களை பெற முடியாது என்றும் ஒரு நபர் ஒருமுறை லட்டு வாங்கி விட்டால் அவர் பேஸ் ரெககனைஷேசன் மூலம் அடுத்த முறை வரும்போது கண்டுபிடிக்கப்படுவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
திருப்பதியில் அடுத்தடுத்து பேஸ் ரெககனைஷேசன் மூலம் பக்தர்கள் சோதனை செய்யப்படுவதால் பெரும் அளவு முறைகேடுகள் தவிர்க்கப்பட்டுள்ளதாகவும் தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வாக்கு திருட்டு மிகப்பெரிய தேச துரோகம்! மக்களவையில் ராகுல் காந்தி ஆவேசம்

ஒரு நீதிபதியை பதவி நீக்கம் செய்ய 3ல் 2 பங்கு எம்பிக்கள் வேண்டும்.. இந்தியா கூட்டணிக்கு இருக்கிறதா?

திருப்பரங்குன்றம் தீபம்: தலைமைச் செயலாளர், ஏடிஜிபி டிச. 17ல் ஆஜராக உத்தரவு

மகாத்மா காந்தியின் படுகொலையை அடுத்து ஆர்.எஸ்.எஸ் அடுத்த திட்டம் இதுதான்: ராகுல் காந்தி

தம்பி விஜய் இதை தவிர்த்திருக்கலாம்! பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் விளக்கம்

அடுத்த கட்டுரையில்
Show comments