Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழ்நாட்டில் 100 டிகிரியை தாண்டிய வெயில் : 3 மாவட்டங்களில் அதிக வெப்பம்..!

Webdunia
புதன், 15 மார்ச் 2023 (11:11 IST)
தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக வெயில் அதிகரித்து வரும் நிலையில் 3 மாவட்டங்களில் 100 டிகிரியை வெப்பம் தாண்டி விட்டதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
 
 ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மாதம் கோடை வெயில் தொடங்கும் என்பதும் ஆனால் இந்த ஆண்டு மார்ச் மாதமே வெயில் கொளுத்தி வருகிறது என்பதையும் பார்த்து வருகிறோம். இந்த நிலையில் தமிழ்நாட்டின் முக்கிய நகரங்களான ஈரோடு சேலம் மற்றும் நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் நேற்று வெயில் 100 டிகிரி தாண்டி உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 
 
தமிழகத்தின் மேற்கு மாவட்டங்களில் படிப்படியாக வெப்பம் அதிகரித்து வருவதாகவும் நேற்று ஈரோடு மாவட்டத்தில் மட்டும் 100.7 டிகிரி வெப்பம் பதிவாகியுள்ளதாகவும் தெரிகிறது. சேலத்தில் 100.5 மற்றும் நாமக்கல்லில் 100.4 டிகிரி வெப்பம் பதிவாகியுள்ளதாகவும் வரும் நாட்களில் இன்னும் அதிக வெப்பம் பதிவாக வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. 
 
தமிழகத்தில் இந்த ஆண்டு வெயில் கடுமையாக இருக்கும் என்பதால் குழந்தைகள் மற்றும் முதியவர்கள் தகுந்த முன் எச்சரிக்கை நடவடிக்கை எடுத்து கொள்ள வேண்டும் என்றும் 12 மணி முதல் 4 மணி வரை வீட்டை விட்டு வெளியே செல்வதை தவிர்க்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்படுகிறது
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments