Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பான் கார்டுடன் ஆதார் எண் இணைக்க அவகாசம் நீட்டிப்பு!!

Webdunia
புதன், 31 மார்ச் 2021 (22:07 IST)
பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்க இன்று கடைசி நாள் என்பதால் நாட்டிலுள்ள மக்கள் அனைவரும் இன்று முந்தியடித்துக்கொண்டு, இணையதளத்தில் நுழைந்ததால், வருமான வரித்துறை இணையதளம் முடங்கியது.

ஆதார் எண் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது முதல் வங்கி, சான்றிதழ், போன் சிம்கார்டு,காஸ் இணைப்பு உள்ளிட்ட பலவற்றிற்கு ஆதர் எண்ணுடன் இணைக்க வேண்டுமென மத்திய அரசு கூறியது.

இந்நிலையில் சமீபத்தில் பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்க மார்ச் 31 ஆம் தேதி கடைசி நாள் எனவும் இல்லாவிட்டால் யார் இணைக்காமல் இருந்தாலும் அவர்களுக்கு ரூ.10000 அபராதம் வசூலிக்கப்படும் என எச்சரித்தது.

பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்க இன்று கடைசி நாள் என்பதால் நாட்டிலுள்ள மக்கள் அனைவரும் இன்று முந்தியடித்துக்கொண்டு, இணையதளத்தில் நுழைந்ததால், வருமான வரித்துறை இணையதளம் முடங்கியது இந்தக் காலக்கெடுவை நீட்டுக்க வேண்டுமென மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

இந்நிலையில்  பான் எண்ணை ஆதார் எண்ணுடன் இணைப்பதற்கான கால அவகாசத்தை வரும் ஜூன் 30 ஆம் தேதிவரை நீட்டித்துள்ளது மத்திய அரசு. இதனால் மக்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரக்ஷா பந்தன் கொண்டாடிய ராகுல் காந்தி - பிரியங்கா காந்தி.. வைரல் புகைப்படம்..!

போதைப்பொருள் உற்பத்தி செய்ய ரகசிய ஆய்வகங்கள்.. மடக்கி பிடித்து கைது செய்த போலீஸ்..!

தவெக மதுரை மாநாடு: விஜய் மட்டுமே பேசுவார்.. காவல்துறைக்கு அளித்த தகவல்..!

3 நாட்களாக உயர்ந்த தங்கம் விலை இன்று திடீர் சரிவு.. சென்னையில் ஒரு சவரன் எவ்வளவு?

வெனிசுலா அதிபரை கைது செய்ய உதவினால் ரூ.483 கோடி பரிசு: அமெரிக்க அரசு அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments