Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நீட் விண்ணப்பத்தில் திருத்தம் செய்ய அவகாசம்! – தேசிய தேர்வு முகமை!

Webdunia
வெள்ளி, 6 ஆகஸ்ட் 2021 (16:39 IST)
மருத்துவ படிப்பில் இட ஒதுக்கீடு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் நீட் தேர்வு விண்ணப்பத்தில் திருத்தம் செய்ய அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.

இந்திய அளவில் மருத்துவப்படிப்புகளில் சேர நீட் நுழைவு தேர்வு ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது. இந்த ஆண்டு செப்டம்பரில் நீட் தேர்வு நடைபெற உள்ள நிலையில் தற்போது நீட் தேர்வுக்காக மாணவர்கள் பலர் விண்ணப்பித்து வருகின்றனர்.

இந்நிலையில் நடப்பு ஆண்டு முதல் மருத்துவ படிப்பில் ஓபிசி பிரிவினருக்கு 27% இட ஒதுக்கீடும், பொருளாதாரரீதியாக பின்தங்கிய வகுப்பினருக்கு 10% இடஒதுக்கீடும் மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில் முதுநிலை படிப்புக்கான நீட் தேர்வுக்கு ஏற்கனவே விண்ணப்பித்தோர் மேற்கண்ட இடஒதுக்கீட்டை கோர விரும்பினால் ஆகஸ்டு 16 முதல் 20ம் தேதிக்குள் விண்ணப்பத்தில் திருத்தங்கள் செய்து கொள்ளலாம் என மருத்துவ அறிவியலுக்கான தேசிய தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரே நாடு ஒரே கணவர் திட்டமா? பஞ்சாப் முதல்வர் ஆவேசம்..!

மதுரை சுங்கச்சாவடியில் கட்டணம் வசூலிக்க தடை: உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு.

உலக நாடுகளின் ஆதரவை பெற்றுள்ளோம்: சென்னை திரும்பிய கனிமொழி பேட்டி..!

நீட் மறு தேர்வு நடத்த முடியாது.. மத்திய அரசு வாதம்.. ஜூன் 6ஆம் தேதி தீர்ப்பு..!

யார் அந்த சார்? 8 கேள்விகள் கேட்ட நயினார் நாகேந்திரன்.. பதிலுக்காக காத்திருப்போம்!

அடுத்த கட்டுரையில்
Show comments