Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பாலியல் ரீதியாக தொல்லைக் கொடுத்தார் - மாநில டிஜிபி மீது ரெயில்வே ஊழியர் புகார்

Advertiesment
பாலியல் ரீதியாக தொல்லைக் கொடுத்தார் - மாநில டிஜிபி மீது ரெயில்வே ஊழியர் புகார்
, வியாழன், 28 ஏப்ரல் 2016 (17:00 IST)
பாலியல் ரீதியாக தனக்கு தொல்லைக் கொடுத்ததாக உத்தரகாண்ட் மாநில டிஜிபி மீது ரெயில்வே பெண் ஊழியர் புகார் அளித்துள்ளார்.
 

 
ரயுல்வே துறையில் பணிபுரிந்த முன்னாள் ஊழியர் ஒருவர், கடந்த 2004ஆம் ஆண்டு ரெயில்வே காவல்துறை தலைமை பாதுகாப்பு ஆணையராக பணியாற்றிய பி.எஸ்.சித்து தன்னிடம் பாலியல் ரீதியாக தவறாக நடந்துக் கொள்ள முயற்சித்தார் என்று குற்றம் சாட்டியுள்ளார்.
 
மேலும், இது குறித்து அப்போது ரெயில்வே நிர்வாகத்திடம் புகார் தெரிவித்தபோது அந்த அதிகாரியின் மீது நடவடிக்கை எடுப்பதற்கு பதிலாக தன்னை இடமாற்றம் செய்தனர் என்றும் பிறகு வேலைநீக்கம் செய்தன்ர் என்றும் கூறியுள்ளார்.
 
நான்கு நாட்களுக்குள் இது குறித்து நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், ஜனாதிபதியிடம் இப்பிரச்சனையை எடுத்து செல்வேன் என்று தெரிவித்துள்ளார்.
 
ஆனால், பெண் ஊழியர் கூறியுள்ள இந்த குற்றச்சாட்டு அடிப்படை ஆதாரமற்றது என்று கூறி மறுத்துள்ளார்.

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்...

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இளம்பெண்ணுக்கு மயக்க மருந்து கொடுத்து 18 பேர் பாலியல் பலாத்காரம் செய்த கொடூரம்