Webdunia - Bharat's app for daily news and videos

Install App

Video: ஆட்டோ டிரைவர் அறைந்ததில் முன்னாள் எம்.எல்.ஏ சுருண்டு விழுந்து பலி!

Prasanth Karthick
ஞாயிறு, 16 பிப்ரவரி 2025 (12:56 IST)

கர்நாடகாவில் ஆட்டோ ஓட்டுனர் அறைந்ததில் முன்னாள் எம்.எல்.ஏ பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

கோவாவை சேர்ந்த முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ லாவு மம்லதார். 68 வயதாகும் இவர் சமீபத்தில் ஒரு வேலையாக கர்நாடக மாநிலம் பெலகாவி வந்துள்ளார். அங்குள்ள ஸ்ரீனிவாஸ் லாட்ஜில் அறை எடுத்து தங்கி இருந்துள்ளார். நேற்று அவர் தனது காரில் காதேபஜார் பகுதியில் சென்றபோது ஆட்டோ ஒன்றுடன் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.

 

எனினும் லாவு மம்லதார் காரை நிறுத்தாமல் நேராக லாட்ஜுக்கு சென்றுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ஆட்டோ டிரைவர் காரை துரத்திச் சென்று லாட்ஜ் முன்னாள் மம்லதாரை மறித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். மேலும் மம்லதாரை ஆட்டோ டிரைவர் கன்னத்திலேயே அறைந்துள்ளார்.

 

பின்பு அங்கிருந்தவர்கள் அவரை பிடித்து அழைத்து சென்ற நிலையில் லாட்ஜ் படியேறும்போது மம்லதார் மயங்கி விழுந்துள்ளார். உடனடியாக அவரை மருத்துவமனையில் அனுமதித்தபோது அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீஸார் ஆட்டோ டிரைவரை கைது செய்துள்ளனர். இதுதொடர்பான சிசிடிவி காட்சி வைரலாகி வருகிறது.

 

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ராஜ்யசபா தேர்தல்.. 4 எம்பி சீட்டுக்கு 6 பேர் போட்டி.. கமல்ஹாசனுக்கு கிடைக்குமா?

சிபிஐக்கு மாற்றப்பட்டது தாது மணல் வழக்கு.. சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு..!

ஒரு கேலிச்சித்திரத்தை நாடே புரிந்துகொள்ளும்படி செய்தது விகடன்: கமல்ஹாசன்

2 வாரங்களாக கரடியின் பிடியில் பங்குச்சந்தை.. காளையின் பிடிக்கு செல்வது எப்போது?

தேர்வுகளை மட்டுமல்ல, வாழ்க்கையையும் சிரமமின்றி கடக்க உதவும் யோகா! - சத்குருவின் ஆலோசனை!

அடுத்த கட்டுரையில்
Show comments