Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் வெடித்து முதியவர் பலி; சார்ஜ் போட்டபோது நடந்த பயங்கரம்!

Webdunia
வெள்ளி, 22 ஏப்ரல் 2022 (09:02 IST)
தெலுங்கானாவில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு சார்ஜ் போட்டபோது ஸ்கூட்டர் வெடித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவில் எரிபொருளில் இயங்கும் இருசக்கர வாகனங்களுக்கு மாற்றாக எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் ப்ரொமோட் செய்யப்படுகின்றன. ஆனால் சமீப காலமாக எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் திடீரென தீப்பிடிக்கும் சம்பவங்கள் அதிகரித்துள்ளன.

கடந்த சில நாட்களில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் திடீரென தீப்பித்து எரிந்த சம்பவங்களின் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவி பீதியை ஏற்படுத்தின.

இந்நிலையில் தெலுங்கானா நிஜாமாபாத் பகுதியை சேர்ந்த பிரகாஷ் என்பவர் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ஒன்றை பயன்படுத்தி வந்துள்ளார். அந்த ஸ்கூட்டருக்கு சார்ஜ் போட பிரகாஷின் தந்தை முயன்றபோது திடீரென வாகனம் வெடித்ததில் முதியவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ள நிலையில், தங்களிடம் நேரடியாக இந்த வாகனம் வாங்கப்படவில்லை என வாகனத்தின் தயாரிப்பு நிறுவனம் விளக்கமளித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பிரதமர் வருகை எதிரொலி: ராமேஸ்வரத்தில் நாளை பொது தரிசனம் ரத்து..!

கச்சத்தீவை மீட்கும் வரை 99 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு எடுக்க வேண்டும்: விஜய் ஐடியா

முட்டை வழங்கவில்லை என புகார்.. மாணவரை துடைப்பத்தால் அடித்த சத்துணவு ஊழியர் சஸ்பெண்ட்..!

ரிசர்வ் வங்கி ஆளுனர் கையெழுத்துடன் புதிய 500 ரூபாய் நோட்டு.. RBI அறிவிப்பு..!

டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு மீண்டும் உயர்வு.. டிரம்ப் வரி விதிப்பு காரணமா?

அடுத்த கட்டுரையில்
Show comments