Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எலெக்ட்ரிக் கார்களுக்காக பிரத்யேக ஷோரூம்: டாடா மோட்டார்ஸ் அறிவிப்பு..!

Webdunia
சனி, 23 டிசம்பர் 2023 (14:40 IST)
எலக்ட்ரிக் கார்களுக்காகவே தனி ஷோரூம் திறக்கப்படும் என்று டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. 
 
கடந்த சில ஆண்டுகளாகவே டீசல் மற்றும் பெட்ரோல் கார்களுக்கு மாற்றாக  எலக்ட்ரிக் கார்கள் பயன்பாட்டிற்கு வந்து கொண்டிருக்கின்றன என்பதும் அனைத்து முன்னணி கார் நிறுவனங்களும் எலக்ட்ரிக் கார்களை தயார் செய்து விற்பனை செய்து வருகின்றன என்பதையும் பார்த்து வருகிறோம். 
 
அந்த வகையில் எலக்ட்ரிக்  கார் தயாரிப்பில் முன்னணியாக இருக்கும் நிறுவனங்களில் ஒன்று டாடா மோட்டார்ஸ். இந்நிலையில் இந்த நிறுவனம் எலக்ட்ரிக் கார்களை விற்பனை செய்வதற்கு என்று பிரத்யேகமாக தனி ஷோரூம்களை நிறுவியுள்ளதாக அறிவித்துள்ளது. 
 
முதற்கட்டமாக ஹரியானா மாநிலம் குர்கான் நகரில் இரண்டு எலக்ட்ரிக் கார் ஷோரூம்கள் திறக்கப்பட்டுள்ளதாகவும் ஜனவரி 7ஆம் தேதியிலிருந்து இந்த கார் ஷோரூம்கள் வாடிக்கையாளர்கள் பயன்பாட்டுக்கு வரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் நாடு முழுவதும் பல எலக்ட்ரிக் கார்களின் ஷோரூம்கள் திறக்க திட்டமிட்டுள்ளதாக டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது 
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சிங்கப்பூர்ல கழிவுநீரை சுத்திகரித்து குடிக்கிறாங்க.. நம்மாளுங்க முகம் சுழிக்கிறாங்க! - அமைச்சர் கே.என்.நேரு!

தமிழகத்தில் 40 சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்வு! - வாகன ஓட்டிகள் அதிர்ச்சி!

நியூசிலாந்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்.. சுனாமி எச்சரிக்கையா?

முதுநிலை ஆசிரியர் தேர்வு எப்போது? 2025ஆம் ஆண்டின் அட்டவணை வெளியீடு..!

எம்பிக்களின் சம்பளம் 24 சதவீதம் உயர்வு.. மத்திய அரசு அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments