Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மம்தா மீது தாக்குதல்... அறிக்கை அளிக்க தேர்தல் ஆணையம் உத்தரவு!

மம்தா மீது தாக்குதல்... அறிக்கை அளிக்க தேர்தல் ஆணையம் உத்தரவு!
, வியாழன், 11 மார்ச் 2021 (10:22 IST)
மம்தா பானர்ஜி தாக்கப்பட்டது தொடர்பாக அறிக்கை அளிக்கும் படி தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. 
 
மேற்கு வங்கத்தில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் கட்சிகள் தேர்தலுக்காக பிரச்சாரத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர். அந்த வகையில் கடந்த முறை பவானிப்பூர் தொகுதியில் போட்டியிட்ட மம்தா பேனர்ஜி சுவேந்து அதிகாரியின் சவாலை ஏற்று அவரை எதிர்த்து போட்டியிட நந்திகிராம் தொகுதியை தேர்வு செய்துள்ளார். 
 
இதனால் அங்கு வேட்புமனுவை தாக்கல் செய்துவிட்டு பரப்புரையை மேற்கொண்டார். பின்னர் தனது காருக்கு திரும்பும் நேரத்தில் காவலர்கள் பக்கத்தில் இல்லாத நேரம் பார்த்து அவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதில் அவரது காலில் காயம் ஏற்பட்டுள்ளதோடு முதுகிலும் அதிக வலி இருப்பதாக தெரிவித்துள்ளார். மேலும் இது குறித்து புகாரும் அளித்துள்ளார். 
 
இந்நிலையில், மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி தாக்கப்பட்டது தொடர்பாக அறிக்கை அளிக்கும் படி தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

வேகமாக அதிகரித்து வரும் தினசரி பாதிப்புகள்! – இந்தியாவில் கொரோனா நிலவரம்!