Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தேர்தல் நேரத்தை மாற்ற முடியாது – தேர்தல் ஆணையம் அதிரடி !

தேர்தல் நேரத்தை மாற்ற முடியாது – தேர்தல் ஆணையம் அதிரடி !
, திங்கள், 6 மே 2019 (15:34 IST)
தேர்தல் நேரத்தை அதிகாலையிலேயே தொடங்க சொல்லி தொடரப்பட்ட மனுவில் தேர்தல் ஆணையம் பதிலளித்துள்ளது.

இந்தியாவில் மக்களவை தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற்று வருகிறது. இதில் நான்கு  கட்ட தேர்தல் நடந்து முடிந்துள்ளது. மீதமுள்ள 3 கட்ட தேர்தல் மே 21 ஆம் தேதி வரை நடக்க இருக்கின்றன. இந்நிலையில் ரமலான் மாதம் மே 5 ஆம் தேதி தொடங்க இருப்பதால் இஸ்லாமியர்கள் அதிகமுள்ள பகுதிகளில் தேர்தல் நடந்தால் நோன்புகள் பாதிக்கப்படும் என சர்ச்சை எழுந்தது. அதையடுத்து நோன்பு நேரத்தில் இஸ்லாமியர்கள் வெளியில் செல்ல மாட்டார்கள் என்பதால் தேர்தல் நேரத்தை அதிகாலை 5 மணிமுதலே அரம்பிக்க வேண்டுமென  நிஜாமுதின் பாஷா என்பவர் வழக்குத் தொடர்ந்திருந்தார்.

இந்த மனுவை ஏற்று விசாரித்த உச்ச்நீதிமன்றம் இது குறித்து பதிலளிக்குமாறு தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டது. இது சம்மந்தமாகத் தேர்தல் ஆணையம் இன்று பதில் அளித்துள்ளது. அதில் ‘ தேர்தலை காலையிலேயே தொடங்கினால் முகவர்கள் இன்னும் சீக்கிரமே வாக்குச்சாவடிக்கு வரவேண்டும். அதனால் அது சாத்தியமில்லாதது’ எனெத் தெரிவித்துள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

8 மணி நேரம் டிரெய்ன் லேட்: நீட் தேர்வை தவற விட்ட மாணவர்கள்