Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கர்நாடகாவில் 15 தொகுதிகளின் இடைத்தேர்தல் ரத்து –தேர்தல் ஆணையம் அறிவிப்பு !

Webdunia
வெள்ளி, 27 செப்டம்பர் 2019 (14:03 IST)
கர்நாடகாவில் நடக்க இருந்த 15 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலை தேர்தல் ஆணையம் ரத்து செய்துள்ளது.

கர்நாடகத்தில் குமாரசாமி தலைமையிலான காங்கிரஸ்-மஜத ஆட்சிக்கு எதிராக இரு கட்சிகளையும் சேர்ந்த 17 ராஜினாமா செய்ய முயன்றனர். ஆனால் அவர்களின் ராஜினாமாவை ஏற்க மறுத்த சபாநாயகர் ரமேஷ் குமார், அந்த 17 பேரையும்  கட்சித் தாவல் தடை சட்டத்தின் கீழ் தகுதி நீக்கம் செய்து உத்தரவிட்டார். இதற்கு எதிராக அந்த 17 பேரும் உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தனர்.

இந்நிலையில் அந்த 17 தொகுதிகளில் 2 தொகுதிகள் தவிர்த்து மீதமுள்ள 15 தொகுதிகளுக்கு அக்டோபர் 21 ஆம் தேதி தேர்தல் அறிவிக்கப்பட்டது. இந்த இடைத்தேர்தலில் போட்டியிட தங்களை அனுமதிக்க வேண்டுமென அந்த 17 எம்.எல்.ஏ.க்களும்  உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். அப்போது தேர்தல் ஆணைய வழக்கறிஞர் தகுதிநீக்கம் சம்மந்தமான வழக்கில் தீர்ப்பு வரும் வரை இடைத் தேர்தலை ஒத்தி வைக்கத் தயாராக இருப்பதாக தெரிவித்தார். இந்த வழக்கின் விசாரணையை அக்டோபர் 22ம் தேதிக்கு ஒத்திவைப்பதாக அறிவித்தார். இதனால் 15 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலையும் தேர்தல் ஆணையம் ரத்து செய்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திமுக வேட்பாளர்களாக முன்னாள் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள்.. களை கட்டும் தேர்தல்..!

ஹனிமூன் சென்ற தம்பதி மாயம்! கணவன் சடலம் பள்ளத்தாக்கில்.. மனைவி எங்கே? - மேகாலயாவில் அதிர்ச்சி சம்பவம்!

அல்லு அர்ஜுனைக் கைது செய்தீர்களே?... இப்போ விராட் கோலியை கைது செய்வீர்களா?- ரசிகர்கள் கொந்தளிப்பு!

ராணுவம் பற்றி அவதூறாகப் பேசுவது பேச்சு சுதந்திரமா? ராகுல் காந்திக்கு நீதிமன்றம் கண்டனம்..!

Free Ticket என கிளம்பிய வதந்தி..? ஆர்சிபி கொண்டாட்டத்தில் பலி போன 11 உயிர்கள்! - தப்பி பிழைத்தவர்கள் சொன்ன தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments