Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஹரியானா மற்றும் மகாராஷ்டிராவுக்கு தேர்தல் அறிவிப்பு – தேர்தல் ஆணையர் அறிவிப்பு !

Webdunia
சனி, 21 செப்டம்பர் 2019 (14:22 IST)
ஆட்சிக்காலம் முடியவுள்ள மகாராஷ்டிரா மற்றும் ஹரியானா ஆகிய மாநிலங்களுக்கு அக்டோபர் 21 ஆம் தேதி தேர்தல் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மகாராஷிடிரா மாநிலத்தில் தேவேந்திர பட்னாவிஸ் தலைமையிலான பாஜக அரசும், ஹரியானா மாநிலத்தில் மனோகர் லால் கட்டார் தலைமையிலான பாஜக அரசும் நடைபெற்று வருகிறது. இந்த அரசுகளின் பதவிக்காலம் நவம்பர் மாதத்தோடு முடிகிறது.

இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோரா .’இவ்விரு மாநிலங்களுக்கும் அக்டோபர் 21ஆம் தேதி ஒரே கட்டமாக சட்டமன்றத் தேர்தல் நடைபெறும். அக்டோபர் 24 ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்படும். மகாராஷ்டிரா மாநிலத்தில் மொத்தமுள்ள 288 தொகுதிகளில் 8.94 கோடி வாக்காளர்களும், ஹரியானாவில் 90 தொகுதிகளில் 1.82 கோடி வாக்காளர்களும் உள்ளனர். பதற்றமானத் தொகுதிகளில் கூடுதல் பாதுகாப்பு அளிக்கப்படும். ’ எனத் தெரிவித்துள்ளார்.

பாஜக ஆட்சி நடந்துவரும் இந்த இரு மாநிலங்களில் ஆட்சியை யார் கைப்பற்றப்போவது என்ற கேள்வி எழுந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

50 அடிக்கு திடீரென உள்வாங்கிய திருச்செந்தூர் கடல்.. ஆபத்தை உணராமல் செல்பி எடுத்த மக்கள்..!

மீண்டும் மாநில பட்டியலுக்குள் கல்வி.. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி!

தூங்கி கொண்டிருந்த நடிகையை அதிரடியாக கைது செய்த போலீஸ்.. 30 நாட்கள் சிறையில் அடைக்க உத்தரவு..!

அமெரிக்காவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்! குலுங்கிய கட்டிடங்கள்! - மக்கள் பீதி!

பகுஜன் சமாஜ் கட்சி பதவியிலிருந்து ஆம்ஸ்ட்ராங் மனைவி நீக்கம்: தலைவர் அதிரடி நடவடிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments