Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

டெல்லியில் 8 வயது சிறுமி பலாத்காரம் : இறந்தது போல் நடித்து தப்பிய சிறுமி

டெல்லியில் 8 வயது சிறுமி பலாத்காரம் : இறந்தது போல் நடித்து தப்பிய சிறுமி
, வியாழன், 2 ஜூன் 2016 (09:50 IST)
டெல்லியில் தனது சகோதரனுடன் உறங்கிக் கொண்டிருந்த 8 வயது சிறுமியை வாய் பொத்தி தூக்கி சென்று பாலியல் பலாத்காரம் செய்த விவகாரத்தில் குற்றவாளி கைது செய்யப்பட்டுள்ளான்.


 

 
டெல்லிக்கு அருகே உள்ள கிராடி எனும் கிராமத்தில் வசிக்கும் ஒரு 8 வயது சிறுமி, கடந்த 28ஆம் தேதி தனது சகோதரனுடன் உறங்கி கொண்டிருந்தாள். அப்போது அங்கு வந்த ஒரு மர்ம நபர், அந்த சிறுமியின் வாயை பொத்தி தூக்கி சென்று பாலியல் பலாத்காரம் செய்தான். 
 
அந்த காம கொடூரன் சிறுமியை வாய் பொத்தி தூக்கி செல்லும் நிகழ்வு அந்த தெருவில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. அதன் மூலம் அந்த நபர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளான்.
 
விசாரணையில், அவன் அந்த சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்யும் போது அந்த சிறுமி கத்த முயன்றுள்ளாள். ஆனால், அவன் எங்கு தன்னை கொலை செய்துவிடுவானோ என்று அஞ்சிய சிறுமி இறந்தது போல் நடித்திருக்கிறாள்.
 
இதனால் பயந்து போன அந்த மர்ம நபர், சிறுமி இறந்து விட்டாள் என்று எண்ணி அங்கிருந்து சென்று விட்டான். சிறிது நேரம் கழித்து அந்த சிறுமி, கண் விழித்து பார்த்த போது, அவன் சிறிது தூரத்தில் அவன் நடந்து செல்வது தெரிந்துள்ளது.
 
இதையடுத்து அங்கிருந்து ஓட்டம் பிடித்திருக்கிறாள் சிறுமி. அதை அவன் பார்த்து விட்டான். எனவே மீண்டும் சிறுமியை துரத்தியிருக்கிறான். ஆனால், கால் இடறி அவன் கீழே விழுந்து விட்டான். இதையடுத்து வீட்டிற்கு சென்ற சிறுமி நடந்தவற்றை தனது பெற்றோரிடம் கூறியிருக்கிறாள். அதன்பின் புகார் செய்யப்பட்டு, போலீசார் விசாரணை செய்து வந்தனர்.
 
சிசிடிவி கேமராவில் பதிவாகியிருந்த அவன் உருவத்தை வைத்து போலீசார் அவனை கைது செய்துள்ளனர். விசாரணையில் அவன் அதே பகுதியை சேர்ந்த வாலிபர் என்பது தற்போது தெரிய வந்துள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பாதிரியாரை கடத்திய பிரபல அரசியல் கட்சித் தலைவர்