Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பிராமண மாணவர்களின் உயர் கல்வி கட்டணத்தை அரசே ஏற்கும்: முதல்வர் அதிரடி அறிவிப்பு

பிராமண மாணவர்களின் உயர் கல்வி கட்டணத்தை அரசே ஏற்கும்: முதல்வர் அதிரடி அறிவிப்பு
, வியாழன், 1 ஜூன் 2023 (10:16 IST)
பிராமண மாணவர்களின் உயர்கல்வி செலவை இனி அரசே ஏற்கும் என தெலுங்கானா மாநில முதல்வர் சந்திரசேகர் ராவ் தெரிவித்துள்ளார். 
 
தெலுங்கானா மாநிலத்தில் ரூ.12 கோடி செலவில் கட்டப்பட்ட பிராமணர் நலக்கூட கட்டிடத்தை நேற்று முதல்வர் சந்திரசேகர் ராவ் திறந்து வைத்தார். அதன் பிறகு அவர் பேசிய போது ’முதன் முதலில் இந்தியாவில் பிராமண சமுதாயத்திற்காக நலக்கூடம் கட்டப்பட்டது தெலுங்கானா மாநிலத்தில் தான் என்றும் பிராமணர்களில் ஏழைகளும் உள்ளனர் என்றும் இதனால் பிராமண நல திட்டத்திற்காக ஆண்டுதோறும் 100 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார். 
 
மேலும் ஐஐடி ஐஐஎம் போன்ற உயர் கல்வி நிறுவனங்கள், தொழில் சார்ந்த படிப்புகள் படிக்கும் பிராமண மாணவ மாணவிகளுக்கு கல்வி கட்டணத்தை அரசே இனி ஏற்றுக்கொள்ளும் என்றும் பரம்பரை அர்ச்சகர்களின் பிரச்சினைகள் குறித்து வரும் அமைச்சரவை கூட்டத்தில் விவாதித்து தீர்வு காணப்படும் என்றும் அவர் கூறினார்.
 
Edited by Mahendran

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

என் ட்விட்டர் கணக்கை முடக்கியது மகிழ்ச்சி, சந்தோசம்தான்: சீமான்