Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எடப்பாடி பழனிச்சாமி நம்பிக்கை வாக்கெடுப்பில் தோற்றால் தமிழகத்தில் ஜனாதிபதி ஆட்சியா?

Webdunia
சனி, 18 பிப்ரவரி 2017 (11:08 IST)
தமிழக முதல்வராக நியமிக்கப்பட்டுள்ள சசிகலா அணியின் எடப்பாடி பழனிச்சாமி இன்று தமிழக சட்டசபையில் இன்று தனது  பெரும்பான்மை நிரூபிக்க வேண்டிய நிலையில் இருக்கிறார். சட்டசபையில் எடப்பாடி பழனிச்சாமி இன்று நம்பிக்கை வாக்கு  கோருகிறார்.

 
எடப்பாடி பழனிச்சாமி இன்று சிறிது நேரத்தில் நம்பிக்கை வாக்குக்கு எடப்பாடி கோருவார். அவர் தனக்கு 124 எம்.எல்.ஏக்கள்  ஆதரவு இருப்பதாக கூறியிருந்தார். ஆனால் தற்போது அந்த எண்ணிக்கை 122 குறைந்துள்ளது.
 
இந்நிலையில் எதிர்க்கட்சியான திமுக மற்றும் அதன் கூட்டணியான காங்கிரஸ் கட்சியும் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக  வாக்களிக்க முடிவு செய்துள்ளனர். அதனால் இந்த எண்ணிக்கை மேலும் குறையவும் வாய்ப்புள்ளது.
 
எடப்பாடி பழனிச்சாமியால் பெரும்பான்மை நிரூபிக்க முடியாமல் போனால், திமுகவுக்கு ஒரு வாய்ப்பு தரப்படும். திமுக இந்த  வாய்ப்பை நிராகரிக்கும் நிலையில் தமிழகத்தில் ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்படும் நிலை ஏற்படும். இதேபோல கடந்த 1991ல்  திமுக ஆட்சி டிஸ்மிஸ் செய்யப்பட்டு ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டது குறிப்பிடதக்கது.

நடுவானில் இயந்திரக்கோளாறு..! அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்..!!

இன்று மாலை 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

அரசியலமைப்பை யாராலும் மாற்ற முடியாது..! காங்கிரஸுக்கு அமைச்சர் நிதின் கட்கரி பதிலடி..!!

வங்கக்கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.! தமிழகத்தில் 3 நாட்களுக்கு ரெட் அலர்ட்..!!

100 நாள் திட்ட பணியாளர்களுக்கு ஊதியம் உயர்வு..! அரசாணை வெளியிட்ட தமிழக அரசு...!!

அடுத்த கட்டுரையில்
Show comments