Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டான் தாவூத்துக்கும் ஷில்பா ஷெட்டிக்கும் ரூ.100 கோடி லிங்க் என்ன?

Webdunia
வியாழன், 24 அக்டோபர் 2019 (10:23 IST)
தாவூத் இப்ராகிமின் நிறுவனத்திடம் இருந்து நடிகை ஷில்பா ஷெட்டி ரூ.100 கோடி வட்டியில்லா கடன் பெற்றுள்ளது சர்சையை ஏற்படுத்தியுள்ளது. 
 
அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்டு விசாரணையில் சிக்கியுள்ள ஆர்கே டபிள்யு முன்னாள் இயக்குனர் ரஞ்சித் பிந்த்ரா மற்றும் மற்றொரு இயக்குனரான பாபா தேவன் என்ற தீரஜ் வாத்வான் ஆகியோருடன் ஷில்பா ஷெட்டி  இயக்குனராக இருந்த எஷன்சியல் ஹாஸ்பிடாலிட்டி (essential hospitality) என்ற நிறுவனம் தொடர்பில் இருந்துள்ளது. 
 
அமலாக்கத்துறையினரின் விசாரணையில் தீரஜ் , டான் தாவூத் இப்ராகிமின் நிறுவனத்திடம் இருந்து பாலிவுட் நடிகை ஷில்ப ஷெட்டியும் அவரது கனவர் ராஜ் குந்தராவும் சேர்ந்து ரூ.100 கோடி வட்டியில்லா கடன் வாங்கியுள்ளதாக கூறியதாக செய்தி வெளியாகியுள்ளது. இது குறித்து அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.  
 
ஆனால், ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ் குந்தரா 2011 ஆம் ஆண்டு விமான நிலையம் அருகில் இருந்த ஒரு சொத்தை ஆர்கே டபிள்யு நிறுவனத்திற்கு விற்றோம். ஆனால், அந்த நிறுவனம் தாவூத்துடன் தொடர்புடைய நிறுவனமா என்பது தெரியாது என்றும் நாங்கள் யாரிடமும் கடன் வாங்கவில்லை என்றும் இந்த செய்திக்கு மறுப்பு தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

அடுத்த கட்டுரையில்
Show comments