Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இன்று ஆஜராக 7வது சம்மன்.. கைது செய்யப்படுவாரா முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்..!

Siva
திங்கள், 26 பிப்ரவரி 2024 (08:56 IST)
டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் இன்று அமலாக்கத்துறை அதிகாரிகள் முன் ஆஜராக வேண்டும் என்று சம்மன்  அனுப்பப்பட்டுள்ள நிலையில் அவர் ஒருவேளை ஆஜராகவில்லை என்றால் கைது செய்யப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

மதுபான கொள்கை வழக்கில் ஊழல் செய்ததாக டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் மீது வழக்கு தொடரப்பட்ட நிலையில் இது குறித்து விசாரணை செய்ய ஏற்கனவே ஆறு முறை  அமலாக்கத்துறை அதிகாரிகள் சம்மன்  அனுப்பினர். 

ஆனால் ஆறு முறையும் ஆஜராகாத அரவிந்த் கெஜ்ரிவால் தற்போது ஏழாவது முறையாக சம்மன்  அனுப்பப்பட்டுள்ளதாகவும் அந்த சம்மன்படி இன்று அவர் ஆஜராக வேண்டும் என்று குறிப்பிடப்பட்டு உள்ளதாகவும் செய்தி வெளியாகியுள்ளது.

ஆனால் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் இன்று அமலாக்கத்துறை அதிகாரிகள் போல் ஆஜராக மாட்டார் என்று கூறப்பட்டுள்ள நிலையில் அவர் இன்று கைது செய்யப்படுவதற்கான வாய்ப்பு இருப்பதாக கூறப்படுவது பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ஏற்கனவே இதே வழக்கில் டெல்லி துணை முதல்வராக இருந்த மணிஷ் சிசோடியா கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமெரிக்காவை தாக்க தயார் நிலையில் ஈரான்.. உலகப்போர் மூளுமா?

மாணவர் விடுதிகளில் வழங்கப்படும் உணவு கால்நடைகளுக்கு விற்கப்படுகிறதா? அண்ணாமலை ஆவேசம்

பிரியங்கா காந்தியின் வாகனத்தை மறித்த யூடியூபர்.. அதிரடியாக கைது செய்த போலீஸ்..!

2029ஆம் ஆண்டும் மோடி தான் பிரதமர்.. சிவசேனாவுக்கு பதிலடி கொடுத்த முதல்வர்..!

விடுபட்டோருக்கு மகளிர் உரிமை தொகை எப்போது? அமைச்சர் தங்கம் தென்னரசு தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments