Webdunia - Bharat's app for daily news and videos

Install App

போர் எதிரொலி! மேகாலயாவில் 2 மாதங்களுக்கு முழு ஊரடங்கு..?

Prasanth Karthick
வெள்ளி, 9 மே 2025 (17:42 IST)

இந்தியா - பாகிஸ்தான் போர் காரணமாக இந்தியா - வங்கதேச எல்லை அருகே உள்ள மேகாலயாவில் 2 மாதங்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

 

இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் சூழல் உச்சத்தை தொட்டுள்ளது. இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூருக்கு பிறகு பாகிஸ்தான் இந்திய நகரங்களை குறிவைத்து ஏவுகணை தாக்குதல் நடத்த முயன்ற நிலையில் அந்த தாக்குதல்கள் இந்திய ராணுவத்தால் முறியடிக்கப்பட்டன.

 

பாகிஸ்தான் இந்தியாவை தாக்க பலவாறு திட்டம் தீட்டி வரும் நிலையில் இந்தியாவின் பல பகுதிகளிலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. பாதுகாப்பு காரணங்களுக்காக எல்லையோர விமான நிலையங்கள் உள்ளிட்டவையும் மூடப்பட்டுள்ளன.

 

இந்நிலையில் இந்தியா - வங்கதேச எல்லையை ஒட்டியுள்ள மேகாலயாவில் போர் காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அடுத்த 2 மாதங்களுக்கு இரவு நேர முழு ஊரடங்கு மேகாலயாவில் அமல்படுத்தப்படுகிறது. தற்போதைய வங்கதேசம், முன்னர் கிழக்கு பாகிஸ்தானாக இருந்து போர் காரணமாக வங்கதேசமாக உருவானது. இந்தியா - பாகிஸ்தான் போரில் வங்கதேசத்தின் நிலைபாடு இன்னும் சரியாக தெரிய வராத நிலையில் இந்த ஊரடங்கு நடவடிக்கை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வேளாண்சார் தொழில்களுக்கு மகத்தான எதிர்காலம்! ஈஷா அக்ரி ஸ்டார்ட்-அப் திருவிழா 2.O

ராகுல்காந்தி இந்திய அரசியலமைப்பையே அவமதித்துவிட்டார்! - தேர்தல் ஆணையர் வேதனை!

காதலியின் கைப்பிடிக்க மனைவி கொலை! திருட்டு என நாடகமாடிய பாஜக உள்ளூர் தலைவர்!

திருமாவளவனுக்கு சமூகநீதி தேவையில்ல.. தேர்தல் சீட்தான் தேவை! - மத்திய இணை அமைச்சர் எல்.முருகன்!

முன்பு வாக்கு திருட்டு தெரியாமல் இருந்தது, ஆனால் இப்போது எல்லோருக்கும் தெரிந்துவிட்டது: ராகுல் காந்தி

அடுத்த கட்டுரையில்
Show comments