Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அந்தமான், நிக்கோபார் தீவுகளில் திடீர் நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை விடப்பட்டதா?

Webdunia
வெள்ளி, 2 செப்டம்பர் 2022 (15:54 IST)
அந்தமான் நிக்கோபார் தீவுகளில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதை அடுத்து அப்பகுதி மக்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். 
 
அந்தமான் தீவுகளில் இன்று மதியம் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. இன்று மதியம் 12.43 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டதாகவும் அந்தமான் தலைநகர் போர்ட் பிளேர் அருகே ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.9 ஆக பதிவாகி உள்ளதாக தேசிய புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
 
மேலும் அந்தமான் நிக்கோபார் தீவுகளில் இருந்து 108 கிலோ மீட்டர் தொலைவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் காரணமாக இதுவரை சேத விவரம் எதுவும் இல்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சுனாமி எச்சரிக்கையும் இதுவரை வெளியிடப்படவில்லை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது
 
ஆனால் அதே நேரத்தில் இந்த நிலநடுக்கம் காரணமாக அந்த பகுதி மக்கள் மிகுந்த அச்சத்துடன் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
 
 

தொடர்புடைய செய்திகள்

ரூ.55,000ஐ தாண்டியது தங்கம் விலை.. ஒரு லட்சத்தை தாண்டியது வெள்ளி விலை.. பொதுமக்கள் அதிர்ச்சி..!

அரசு கல்லூரிகளில் விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்! – மிஸ் பண்ணிடாதீங்க!

சஹாரா க்ரூப்ஸை குறிவைத்த Scam 2010 வெப் சிரிஸ்! – வழக்கு தொடர்வோம் என எச்சரிக்கை!

கூட்ட நெரிசலில் இறந்தாரா? கொலையா? செண்ட்ரல் வந்த ரயிலில் அழுகி கிடந்த ஆண் சடலம்!

சென்னையின் பல்வேறு பகுதிகளில் பலத்த மழை.. மகிழ்ச்சியில் பொதுமக்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments