Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்த ஆண்டின் முதல் நிலநடுக்கம்: அரியானாவில் மக்கள் அச்சம்!

Webdunia
ஞாயிறு, 1 ஜனவரி 2023 (15:29 IST)
2023 ஆம் ஆண்டு இன்று பிறந்துள்ள நிலையில் இன்று முதல் நாளே ஹரியானா மற்றும் வங்காள விரிகுடா பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. 
 
இன்று 10:56 மணிக்கு வங்காள விரிகுடா பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டதாகவும் இது ரிக்டர் அளவில் 4.5 என பதிவாகியுள்ளதாகவும் தேசிய நிலநடுக்க அறிவியல் மையம் தெரிவித்துள்ளது. 
 
அதேபோல் அரியானாவில் உள்ள ஜாஜ்பூர் மாவட்டத்தில் இருந்து வடமேற்கு பகுதியில் இன்று அதிகாலை 1.19 மணி அளவில் லேசான நிலநடுக்கம் உணரப்பட்டதாக இதனால் மக்கள் அச்சத்துடன் இருப்பதாகவும் கூறப்படுகிறது.  இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.5 ஆக பதிவாகியுள்ளது.
 
2023ஆம் ஆண்டு பிறந்த முதல் நாளே ஹரியானா மற்றும் வங்காள விரிகுடா பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இருப்பினும் இந்த நிலநடுக்கத்தால் எந்தவித சேதமும் ஏற்படவில்லை என கூறப்படுகிறது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

மனைவியை அடித்துக் கொன்ற கணவர்.! உடலை தூக்கில் தொங்கவிட்ட கொடூரம்..!!

தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு கேலிக் கூத்து.! ஓட்டு சதவீதத்தில் குளறுபடி..! இபிஎஸ் விமர்சனம்..!!

இந்தோனேசியாவில் ஸ்டார்லிங்க் இணைய சேவையை தொடங்கிய எலான் மஸ்க்.. இந்தியாவில் எப்போது?

சென்னை சென்ட்ரல் அருகே தபால் நிலைய மேற்கூரை இடிந்து விபத்து.. ஊழியர்கள் படுகாயம்..!

குறுவைத் தொகுப்புத் திட்டத்தை உடனே அறிவிக்க வேண்டும்.! தமிழக அரசுக்கு ராமதாஸ் கோரிக்கை..!!

அடுத்த கட்டுரையில்
Show comments