Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டெல்லியில் உள்பட வட மாநிலங்களில் நில அதிர்வு.. பொதுமக்கள் அச்சம்!

Mahendran
புதன், 11 செப்டம்பர் 2024 (15:04 IST)
டெல்லி உள்பட வட மாநிலங்களில் நில அதிர்வு உணரப்பட்டதாக கூறப்படுவதை அடுத்து பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளன.
 
பாகிஸ்தானில் இன்று நண்பகல் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர்  அளவில் 5.8 நிலையில் இந்த நிலநடுக்கம்  அண்டை நாடான இந்தியா ஆப்கானிஸ்தான் ஆகிய பகுதிகளிலும் உணரப்பட்டதாக செய்திகள் வெளியாகி உள்ளன.
 
குறிப்பாக தலைநகர் டெல்லி, உத்தர பிரதேசம், ஹரியானா, பஞ்சாப், ஜம்மு காஷ்மீர் ஆகிய இடங்களில் நில அதிர்வு உணரப்பட்டதாகவும் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் இருந்த பொதுமக்கள் பதறி அடித்து வெளியே வந்து சாலையில் கூடி இருப்பதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளன.
 
கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு டெல்லியில் ஏற்கனவே நில அதிர்வு உணரப்பட்ட நிலையில் தற்போது மீண்டும் நில அதிர்வு உணரப்பட்டதால் அந்த பகுதி மக்கள் அச்சத்துடன் காணப்படுகின்றனர்.
 
இந்த நிலையில் பாகிஸ்தானில் ஏற்பட்ட நிலநடுக்கம் அந்நாட்டு மக்களை பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில் இந்த நிலநடுக்கம் குறித்த சேத விவரங்கள் எதுவும் இதுவரை வெளிவரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியாவை அச்சுறுத்தும் நாய்க்கடி சம்பவங்கள்! தானாக விசாரிக்க முன்வந்த உச்சநீதிமன்றம்!

பிரதமரை விரைவில் சந்திப்பேன்: தே.மு.தி.க இளைஞரணி செயலாளர் விஜயபிரபாகரன்

எந்த திருப்புமுனையும் இல்லை.. பிரதமர் விழாவில் திருமாவளவன் கலந்து கொண்டது குறித்து வன்னியரசு விளக்கம்..!

தாத்தாவுடன் மருத்துவமனை வந்த ஐடி ஊழியர் ஓட ஓட வெட்டி கொலை.. அதிர்ச்சி பின்னணி..!

டிரம்பை கொல்வேன், அமெரிக்காவை அழிப்பேன்: நடுவானில் பயணி செய்கையால் அதிர்ச்சி..!

அடுத்த கட்டுரையில்
Show comments