Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

காங்கிரஸ் காலத்துல சாக்லேட் கூட வாங்கி சாப்பிட முடியாது! அவ்ளோ வரிகள்! - பிரதமர் மோடி விமர்சனம்!

Advertiesment
PM Modi

Prasanth K

, வெள்ளி, 5 செப்டம்பர் 2025 (09:47 IST)

ஜிஎஸ்டி வரி வரம்புகள் குறைக்கப்பட்டுள்ள நிலையில் அதுகுறித்து பேசிய பிரதமர் மோடி, காங்கிரஸ் ஆட்சியில் ஏராளமான வரிகள் விதிக்கப்பட்டதாக விமர்சித்துள்ளார்.

 

மத்திய அரசால் அறிமுகம் செய்யப்பட்டு நடைமுறையில் உள்ள ஜிஎஸ்டி வரிவிதிப்பு முறையில் புதிய மாற்றங்கள் செய்யப்பட்டு பல்வேறு பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரிகள் குறைக்கப்பட்டுள்ளன. ஆயுள் காப்பீடு உள்ளிட்டவற்றிற்கு ஜிஎஸ்டி முற்றிலுமாக விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய ஜிஎஸ்டி நடைமுறை மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

 

இந்நிலையில் இதுகுறித்து பேசிய பிரதமர் மோடி “முந்தைய காங்கிரஸ் ஆட்சி காலத்தில் குழந்தைகள் சாக்லேட் கூட வாங்கி சாப்பிட முடியாது. அவ்வளவு அதிகமான வரிகளை விதித்தார்கள். காங்கிரஸ் விதித்த அதிகமான வரிகளால் விவசாயிகளும் பெரிதும் பாதிக்கப்பட்டனர். தற்போது கொண்டு வரப்பட்டுள்ள ஜிஎஸ்டி சீர்திருத்தங்களால் வரி செலுத்தும் முறை எளிமையாக இருக்கும். மக்களின் வாழ்க்கை தரம் மேம்படுவதோடு, மக்களின் நுகர்வு திறன் மற்றும் வளர்ச்சி அதிகரிக்கும்” என கூறியுள்ளார்.

 

Edit by Prasanth.K


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கூல்ட்ரிங்ஸில் மயக்க மருந்து கலந்து வன்கொடுமை! சிசிடிவியில் வெளியான ட்விஸ்ட்! - சீரியல் நடிகர் கைது!