Webdunia - Bharat's app for daily news and videos

Install App

18 வயது நிரம்பாமல் வாகனம் ஓட்டினால் ஆர்.சி ரத்து.. லைசென்ஸ் கிடைக்காது! – ஜூன் 1 முதல் புதிய விதிமுறைகள்!

Prasanth Karthick
புதன், 29 மே 2024 (18:21 IST)
18 வயது நிரம்பாதவர்கள் வாகனம் ஓட்டினால் விதிக்கப்படும் அபராதம் குறித்த புதிய விதிமுறைகள் ஜூன் 1 முதல் அமலுக்கு வர உள்ளது.



நாடு முழுவதும் இருசக்கர வாகனங்கள், கார்கள் புழக்கம் அதிகரித்துவிட்ட நிலையில் 18 வயது நிரம்பாத சிறுவர்கள் வாகனம் ஓட்டும் சம்பவங்கள் அதிகரித்துள்ளது. வாகன ஓட்டுனர் உரிமம் பெற 18 வயது பூர்த்தியடைந்திருக்க வேண்டும் என்பது அடிப்படை விதி. ஆனால் 18 வயது கூட நிரம்பாத சில சிறுவர்கள் வாகனங்களை சாலையில் ஓட்டுவதுடன் விபத்துகளையும் ஏற்படுத்தி விடுவது பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

ALSO READ: தனக்கு எதிராக புகார் அளித்த பெண்ணுடன் சமரசம்.. ஜாமின் கேட்கும் பூசாரி கார்த்திக் முனுசாமி..!

இதனால் 18 வயது நிரம்பாத சிறுவர்கள் வாகனம் ஓட்டுவதை தடுக்கும் வகையில் புதிய விதிமுறைகள் ஜூன் 1ம் தேதி முதல் அமலுக்கு வர உள்ளது. அதன்படி, 18 வயது நிரம்பாத சிறுவர்கள் யாராவது வாகனம் ஓட்டி வந்து பிடிபட்டால் அந்த வாகனத்தின் ஆர்.சி ரத்து செய்யப்படும். மேலும் வாகனம் ஓட்டி வந்த சிறுவனுக்கு 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படுவதுடன், 25 வயது வரை லைசென்ஸ் பெற தடையும் விதிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

6 மாவட்டங்களில் இன்று இரவு கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் எச்சரிக்கை..!

பதவியேற்பின்போது பாலஸ்தீனத்தை ஆதரித்து முழக்கம்.. ஒவைசி தகுதி நீக்கம் செய்யப்படுகிறாரா?

அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர் விஜயபாஸ்கர் தலைமறைவு.. என்ன நடந்தது?

வெளி மாநில பதிவெண் கொண்ட ஆம்னி பேருந்துகளை தடுக்க கூடாது: உச்சநீதிமன்றம் உத்தரவு..!

திமுகவும் இடைத்தேர்தலை புறக்கணித்துள்ளது: முன்னாள் அமைச்சர் ஆர்பி உதயகுமார்

அடுத்த கட்டுரையில்
Show comments