குடியரசு தலைவர் தேர்தலில் திரெளபதி முர்மு வெற்றி: தலைவர்கள் வாழ்த்து!

Webdunia
வெள்ளி, 22 ஜூலை 2022 (07:20 IST)
இந்திய குடியரசுத் தலைவர் தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்ட நிலையில் இந்த தேர்தலில் பாஜக கூட்டணியின் வேட்பாளர் திரெளபதி முர்மு வெற்றி பெற்றதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. இதனை அடுத்து அவருக்கு அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்
 
இதனை அடுத்து நாட்டின் 15வது குடியரசுத் தலைவராக திரெளபதி முர்மு அதிகாரப்பூர்வமாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். புதிய குடியரசுத் தலைவராக தேர்வு செய்யப்பட்ட திரெளபதி முர்மு அவர்களுக்கு பிரதமர் மோடி, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி, எதிர்க்கட்சி குடியரசுத் தலைவர் வேட்பாளர் யஷ்வந்த் சின்ஹா, தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் உள்ளிட்டோர் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர் 
 
குடியரசுத் தலைவர் தேர்தலில் திரெளபதி முர்மு வெற்றி பெற்று விட்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட உடன் பிரதமர் நரேந்திர மோடி நேரில் சென்று திரெளபதி முர்மு அவர்களுக்கு பூங்கொத்து கொடுத்து வாழ்த்தினார் என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மாதவிடாயை நிரூபிக்க சானிட்டரி நாப்கின்களை காட்டு.. அடாவடி செய்த 2 மேற்பார்வையாளர்கள் மீது வழக்கு!

மேயர் மற்றும் மேயரின் கணவர் இரட்டை கொலை வழக்கு: 5 பேருக்குத் தூக்கு தண்டனை!

மாணவர்களுக்கு மீண்டும் லேப்டாப்.. HP, Dell, மற்றும் Acer நிறுவனங்களுடன் ஒப்பந்தம்..!

ரூ.1 கோடி இன்சூரன்ஸ் பணத்திற்காக பெற்ற மகனை கொலை செய்த தாய்.. கள்ளக்காதலனும் உடந்தை..!

11 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த அரசியல் கட்சி பிரமுகர்.. போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு..!

அடுத்த கட்டுரையில்
Show comments