Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தீவிர புயலாக வலுப்பெற்றது டவ்-தே! – வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

Webdunia
ஞாயிறு, 16 மே 2021 (08:40 IST)
அரபிக்கடலில் உருவான டவ்-தே பியல் தீவிர புயலாக மாறியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அரபிக்கடலில் உருவாகியுள்ள டவ்-தே புயலானது தற்போதைய நிலவரப்படி கோவாவின் பனாஜி நகரிலிருந்து 190 கி.மீட்டர் தென்மேற்கில் நிலை கொண்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போது தீவிர புயலாக வலுவடைந்துள்ள டவ்-தே அடுத்த 12 மணி நேரத்திற்குள் அதிதீவிர புயலாக மாறும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

நாளை மறுநாள் குஜராத் மாநிலம் போர்பந்தர் அருகே இந்த புயல் கரையை கடக்கும் என கணிக்கப்பட்டுள்ள நிலையில் கரையை கடக்கும் முன்னதாக தென் மாநிலங்களான கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தமிழக மேற்கு தொடர்சி மழையை ஒட்டிய மாவட்டங்கள் ஆகிய பகுதிகளில் கனமழை, நிலச்சரிவு போன்றவை ஏற்படலாம் என கூறப்பட்டுள்ளது. இதனால் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ள நிலையில் மாநில அரசுகள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.

தொடர்புடைய செய்திகள்

மாமியாருடன் குடும்பம் நடத்தும் மருமகன்.. காவல்துறையில் மாமனார் அளித்த புகார்.

திருடர்கள் என்ற பழியை தமிழ்நாட்டு மக்கள் மீது பிரதமர் சுமத்தலாமா.? முதல்வர் மு.க ஸ்டாலின் கண்டனம்..!!

நான் பார்த்து ரசித்து நெகிழ்ந்த இளம் தலைவர் ராகுல்காந்தி: செல்லூர் ராஜு

கோயம்பேட்டில் பசுமைப் பூங்கா அமைக்க வேண்டும்..! முதல்வருக்கு அன்புமணி ராமதாஸ் கடிதம்.!!

ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி மறைவு எதிரொலி.. அதிபர் தேர்தல் நடத்த திட்டம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments