Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தீவிர புயலாக வலுப்பெற்றது டவ்-தே! – வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

Webdunia
ஞாயிறு, 16 மே 2021 (08:40 IST)
அரபிக்கடலில் உருவான டவ்-தே பியல் தீவிர புயலாக மாறியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அரபிக்கடலில் உருவாகியுள்ள டவ்-தே புயலானது தற்போதைய நிலவரப்படி கோவாவின் பனாஜி நகரிலிருந்து 190 கி.மீட்டர் தென்மேற்கில் நிலை கொண்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போது தீவிர புயலாக வலுவடைந்துள்ள டவ்-தே அடுத்த 12 மணி நேரத்திற்குள் அதிதீவிர புயலாக மாறும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

நாளை மறுநாள் குஜராத் மாநிலம் போர்பந்தர் அருகே இந்த புயல் கரையை கடக்கும் என கணிக்கப்பட்டுள்ள நிலையில் கரையை கடக்கும் முன்னதாக தென் மாநிலங்களான கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தமிழக மேற்கு தொடர்சி மழையை ஒட்டிய மாவட்டங்கள் ஆகிய பகுதிகளில் கனமழை, நிலச்சரிவு போன்றவை ஏற்படலாம் என கூறப்பட்டுள்ளது. இதனால் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ள நிலையில் மாநில அரசுகள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒன்றல்ல இரண்டல்ல 8 ஆண்களை திருமணம் செய்த பெண்.. 1 வருட தேடலுக்கு பின் கைது..!

ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவதை இந்தியா நிறுத்திவிட்டதா? டிரம்ப் அளித்த பதில்..!

’தி கேரளா ஸ்டோரி’ படத்திற்கு தேசிய விருது: முதலமைச்சர் கடும் கண்டனம்

சென்னை - வேளச்சேரி பறக்கும் ரயில் மெட்ரோவுடன் இணைப்பு.. ரயில்வே வாரியம் ஒப்புதல்..!

பாகிஸ்தானிடம் இருந்து எண்ணெய் வாங்க வேண்டிய நிலை வருமா? டிரம்ப் கிண்டலுக்கு இந்தியா பதில்..!

அடுத்த கட்டுரையில்
Show comments