Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஓட்டு போட்டால் தோசை, காபி, வைஃபை இலவசம் - கர்நாடகாவில் ருசிகரம்

Webdunia
சனி, 12 மே 2018 (09:32 IST)
கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் முதல் முறை வாக்களிப்பவர்கள், மை தடவிய கையை காட்டினால் மசால் தோசை, காபி இலவசமாக வழங்கப்படும் என பெங்களூருவில் உள்ள ஹோட்டல் ஒன்று தெரிவித்துள்ளது.
இன்றைய இளம் தலைமுறையினர் பலர், அரசியலிலும் வாக்களிப்பதிலும் நாட்டமில்லாததால் பலர் வாக்களிப்பதையே புறக்கனிக்கின்றனர். ஆனால் இளைஞர்களுக்கு தெரிவதில்லை அவர்கள் நினைத்தால் எப்பேர்ப்பட்ட மாற்றத்தையும் கொண்டு வர முடியும் என்று.
 
பெற்றோர்கள் வாக்களித்தால் குழந்தைகளுக்கு நான்கு மதிப்பெண்கள் வழங்க அம்மாநில ஆங்கில மொழிவழி பள்ளி மேலாண்மைக் கழகம் அறிக்கை வெளியிட்டது.
இந்நிலையில் இளைஞர்களை வாக்களிக்க ஊக்குவிக்கும் வகையில், பெங்களூருவில்  ஹோட்டல் நடத்தி வரும் கிருஷ்ணராஜ் என்பவர், இன்று நடைபெற்றுக் கொண்டிருக்கும் கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் முதல் முறையாக வாக்களிப்பவர்கள் மை வைத்த விரலைக் காட்டினால், மசால் தோசையும் காபியும் இலவசமாக வழங்கப்படும். மற்ற வாக்காளர்களுக்கு காபி மட்டும் இலவசமாக வழங்கப்படும் என்று அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
 
இதுகுறித்து பேசிய அவர் தான் எந்த கட்சியையையும் சார்ந்தவன் இல்லை என்றும் இளைஞர்களை வாக்களிக்க ஊக்குவிக்குவதற்காகவே இந்த முயற்சியை மேற்கொண்டதாக தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

ஓட்டலுக்குள் புகுந்து சூறையாடிய 5"பேர் கொண்ட கும்பலை சி.சி.டி.வி காட்சிகளை வைத்து போலீசார் தேடுதல் வேட்டை!

மகளுக்கு சேர்த்து வைத்த 100 பவுன் நகை கொள்ளை.. ஓய்வுபெற்ற துணை வேந்தர் வீட்டில் திருட்டு..!

மழைக்காலத்தில் கூட இப்படி இல்லையே.. குன்னூரில் 17 செ.மீ. மழைப்பதிவு..!

பாமக - நாம் தமிழர் போன்ற சிறிய கட்சிகள் எல்லாம் தமிழகத்தில் ஆட்சிக்கு வர ஆசைப்படும்போது காங்கிரஸ் பேரியக்கம் மீண்டும் ஆட்சிக்கு வரக்கூடாதா..? தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகை!

திருப்பதியில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்.! சாமி தரிசனம் செய்ய 24 மணி நேரம் காத்திருப்பு..!!

அடுத்த கட்டுரையில்
Show comments