Webdunia - Bharat's app for daily news and videos

Install App

என்ன செய்வதென்று தெரியாமல் கழுதைகளை சிறையில் அடைத்த காவல்துறை

Webdunia
புதன், 29 நவம்பர் 2017 (14:19 IST)
உத்தரபிரதேச மாநிலத்தில் ரூ.60 ஆயிரம் மதிப்புள்ள தாவரங்களை தின்று சேதப்படுத்திய கழுதைகளுக்கு வினோத முறையில் நான்கு நாட்கள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

                                                           நன்றி: ANI
உத்தரபிரதேச மாநிலம் ஜாலோன் மாவட்டத்தில் உள்ள சிறை வளாகத்தில் அழகுக்காக தாவரங்கள், மரக்கன்றுகள் வைக்கப்பட்டுள்ளன. கடந்த 24ஆம் தேதி வளாகத்தில் புகுந்த 8 கழுதைகள் தாவரங்களை தின்று சேதப்படுத்தியுள்ளன. மூத்த சிறை அதிகாரிகளின் உத்தரவின் போரில் கழுதைகளை சுற்றி வளைத்து பிடித்த காவல்துறையினர் அவைகளை சிறையில் அடைத்தனர்.
 
கழுதைகள் சிறையில் அடைக்கப்பட்டதை அறிந்த அதன் உரிமையாளர் உள்ளூர் பாஜக தலைவர் ஆதரவுடன் சிறை வளாக அதிகாரியை சந்தித்து பேசிய பின்னரே கழுதைகள் விடுவிக்கப்பட்டது. அதுவும் நான்கு நாட்கள் கழித்துதான் கழுதைகள் விடுவிக்கப்பட்டுள்ளது.
 
இதுகுறித்து சிறையின் தலைமை காவலர் கூறியதாவது:-
 
ரூ.60 ஆயிரம் மதிப்புள்ள தாவரங்களைக் கழுதைகள் தின்றும் கடித்தும் சேதப்படுத்தின. பலமுறை எச்சரித்தும் கழுதைகளின் உரிமையாளர் அவற்றை கட்டுப்படுத்தவில்லை. எனவே, உயர் அதிகாரிகளின் உத்தரவின் பேரில் கழுதைகள் சிறையில் அடைக்கப்பட்டது. பல சமயங்களில் சாலை விபத்துகள் ஏற்பட்ட இந்த கழுதைகள் காரணமாக இருந்துள்ளது என்று கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அரசு பேருந்துகளில் தமிழ்நாடு பெயர் நீக்கப்பட்டதா? அமைச்சர் சிவசங்கர் விளக்கம்..!

உன் அம்மாவையும் தாத்தாவையும் கொன்றது தீவிரவாதிகள்.. பிலாவல் பூட்டோவுக்கு ஒவைசி பதிலடி..!

ராகுல் முனீர் மற்றும் ராகுல் ஷெரீப் போன்ற பெயர்கள் ராகுலுக்கு பொருத்தமாக இருக்கும்: பாஜக..!

இந்தியாவை துண்டு துண்டாக உடைப்பேன்: மிரட்டிய பாகிஸ்தான் தீவிரவாதி மர்ம மரணம்..!

ஜோதியை அடுத்து இன்னொரு யூடியூபர் கைது.. பாகிஸ்தானுக்கு உளவு சொன்னாரா?

அடுத்த கட்டுரையில்
Show comments