Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டாலும் வேலை நிறுத்தம் தொடரும்: மேற்குவங்க மாநில டாக்டர்கள் உறுதி..!

Siva
செவ்வாய், 10 செப்டம்பர் 2024 (11:00 IST)
போராட்டம் நடத்தக்கூடாது என்ற உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டாலும் எங்களுடைய போராட்டம் தொடரும் என்று மேற்குவங்க மருத்துவர்கள் தெரிவித்து இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேற்குவங்க மாநிலத்தில் பெண் டாக்டர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து டாக்டர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

மருத்துவ பணியாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டாக்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் நோயாளிகள் மிகுந்த பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர். இந்த நிலையில் டாக்டர்கள் போராட்டம் காரணமாக 23 நோயாளிகள் உயிரிழந்திருப்பதாக சுகாதாரத்துறை அமைச்சகம் உச்சநீதிமன்றத்தில் தகவல் தெரிவித்துள்ள நிலையில் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள டாக்டர்கள் உடனடியாக வேலைக்கு திரும்ப வேண்டும் என்றும் இல்லாவிட்டால் துறைரீதியாக நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என்றும் நீதிமன்றத்தில் கோரிக்கை விடப்பட்டது.

இந்த நிலையில் சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் டாக்டர்கள் உடனடியாக பணிக்கு திரும்ப வேண்டும் என்றும் இல்லையென்றால் துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் நீதிபதிகள் தங்கள் உத்தரவில் தெரிவித்தனர். இந்த நிலையில் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டாலும் பாதிக்கப்பட்டவருக்கு நீதி கிடைக்கவில்லை என்பதால் எங்கள் போராட்டம் தொடரும் என்றும் மருத்துவர்கள் தெரிவித்து இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விநாயகர் சிலையில் வைத்து பூஜை செய்த ஒரே ஒரு லட்டு - 1 லட்சத்து 51 ஆயிரத்திற்கு ஏலம் எடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது!

இளம் பெண்ணுக்கு கொலை மிரட்டல்... மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் தாய் மகனுடன் வந்து புகார்!

மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் மக்கள் மருந்தகத்தை திறந்து வைத்து பார்வையிட்டார்!

9ம் வகுப்பு மாணவியை கர்ப்பமாக்கிய உறவுக்கார இளைஞர்: போக்சோ சட்டத்தில் கைது..!

ஆஸ்கர் வென்ற ஹாலிவுட் ’குரல் மன்னன்’ மறைந்தார்! - ரசிகர்கள் சோகம்!

அடுத்த கட்டுரையில்