மகாராஷ்டிராவில் போக்குவரத்து காவலரை தாக்கிய டாக்டருக்கு, நீதிமன்றம் 8 ஆண்டுகளுக்குப் பிறகு 5600 ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கியது.
2018 ஆம் ஆண்டு, மருத்துவர் ஒருவர் தவறான வழியில் தனது காரை செலுத்தியபோது, அங்கு இருந்த போக்குவரத்து காவலர், அவரிடம் ஓட்டுனர் உரிம அட்டையை கேட்டார். இதனால், இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு, ஒரு கட்டத்தில், காவலரை மருத்துவர் கீழே தள்ளியுள்ளார்.
இது தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டது. சாட்சிகள் விசாரணை மற்றும் வழக்குத் தீர்ப்பு வருவதற்கே 7 ஆண்டுகள் ஆகியுள்ளது.
இந்நிலையில், குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட மருத்துவருக்கு 5600 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. 7 ஆண்டுகள் நடந்த வழக்கிற்கு வெறும் 5600 ரூபாய் அபராதம் மட்டுமே விதிக்கப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.