Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாளை மருத்துவமனை, தெரு விளக்குகளை அணைக்க வேண்டாம் - மத்திய அரசு

Webdunia
சனி, 4 ஏப்ரல் 2020 (16:21 IST)
நாளை மருத்துவமனை, தெரு விளக்கு மற்றும், அத்தியாவசிய தேவைகளுக்கான இடங்களில் விளக்குகளை அணைக்க வேண்டாம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 21 நாட்கள் பிறப்பிக்கப்பட்டுள்ள இந்த ஊரடங்கில் முதல் 10 நாட்கள் இன்றுடன் முடிவடைகிறது. பத்து நாட்கள் முடிவடைவதை தொடர்ந்து பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார்.

அதில் அவர் நாட்டு மக்கள் அனைவரும் இணைந்து ஊரடங்கு உத்தரவை பின்பற்றுவது மகிழ்ச்சியாக இருப்பதாகவும், தனித்தனியாக இருந்தாலும் 130 கோடி மக்களும் ஒற்றுமையாக இருப்பதாகவும் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர் ஏப்ரல் 5ம் தேதி மிகவும் முக்கியமான நாள் என்று தெரிவித்தார். ஏப்ரல் 5ம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று இரவு 9 மணிக்கு மக்கள் வீட்டில் உள்ள மின்சார விளக்குகளை அணைத்து விட்டு அதற்கு பதிலாக டார்ச் லைட், அகல் விளக்குகள் அல்லது மெழுகுவர்த்திகளை ஏற்றுமாறு கேட்டுக்கொண்டுள்ளார். இரவு 9 மணிக்கு தொடங்கி 9 நிமிடங்கள் இதை நீட்டிக்குமாறு அவர் கேட்டுக்கொண்டுள்ளார். இதன்மூலமாக நமது ஆரோக்கியத்திற்காக உழைக்கும் மருத்துவர்கள் உள்ளிட்ட சக மக்களை அந்த 9 நிமிடத்தில் நினைத்து  பார்க்க வேண்டுமென அவர் கூறியிருந்தார்.

இந்நிலையில் , பிரசார் பாரத் நியூஸ் சர்வீஸ் நிறுவனம் தனது டிவிட்டர் பக்கத்தில், நாளை 9 மணிக்கு அகல் விளக்கு மற்றும் மெழுகுவர்த்தி ஏற்றும்போது ஆல்கஹால் கலந்த சானிடைசரை பயன்படுத்த வேண்டாம் என சோப்பு போட்டு மட்டும்
கழுவிட்டு விளக்கேற்றும்படி அறிவுறுத்தியுள்ளது.

இந்நிலையில் இப்போது மத்திய அரசு அறிவித்துள்ளதாவது. நாளை மருத்துவமனை, தெரு விளக்கு மற்றும், அத்தியாவசிய தேவைகளுக்கான இடங்களில் விளக்குகளை அணைக்க வேண்டாம் என  மத்திய அரசு தெரிவித்துள்ளது.
 
இதுகுறித்து மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளதாவது :

 
*நாளை இரவு வீட்டில் எரியும் மின் விளக்குகளை மட்டும் அணைத்தால் போதும்.கணினி, ஏசி , மின்விசிறிகளை அணைக்கத்தேவையில்லை.

*தெரு விளக்குகள் வீட்டில் உள்ள மின் சாதன பொருட்களை அணைக்க தேவையில்லை.

*மருத்துவமனை உள்ளிட்ட ஏனைய அத்தியாவசிய பகுதிகளில் விளக்குகள் அணைக்கப்படாது. பொதுமக்களின் பாதுகாப்புக்காக தெரு விளக்குகளை அணைக்க வேண்டாம் என மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஸ்டாலினின் 50 மாத ஆட்சியில் ரூ.4 லட்சம் கோடி கடன்: எடப்பாடி பழனிசாமி ஆவேசம்

போராட்டம் செய்யும் ஆசிரியர்களை கைது செய்வதா? திமுக அரசுக்கு நயினார் நாகேந்திரன் கண்டனம்

அரசியல் வாழ்க்கையில் நான் மகிழ்ச்சியாக இல்லை: நடிகை கங்கனா ரனாவத்

உலகின் சிறந்த 250 மருத்துவமனைகள்.. வெறும் மூன்று இந்திய மருத்துவமனைகளுக்கே இடம்..!

திருமணம் செய்து கொள்ள மறுப்பு.. 18 வயது கல்லூரி மாணவி மீது ஆசிட் வீசிய 20 வயது கல்லூரி மாணவர்..!

அடுத்த கட்டுரையில்
Show comments