Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிவசேனாவின் 15 எம்.எல்.ஏக்கள் கடத்தல் - துரோகத்தால் ஆதித்யா தாக்ரே வேதனை!

Webdunia
செவ்வாய், 28 ஜூன் 2022 (14:02 IST)
மகராஷ்டிரா சிவசேனாவின் 15 எம்.எல்.ஏக்கள் கடத்தப்பட்டுள்ளனர் என்று அமைச்சர் ஆதித்யா தாக்ரே தெரிவித்துள்ளார்.

 
அரசியல் குழப்பம் நீடித்து வரும் நிலையில், மாநில அமைச்சரவைக் கூட்டம் இன்று பிற்பகல் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தில் முதலமைச்சர் உத்தவ் தாக்ரே காணோளியில் பங்கேற்கிறார்.
 
மகராஷ்டிரா அமைச்சர் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் சிவசேனா கட்சியின் அதிருப்தி எம்.எல்.ஏக்கள் 40 பேர் அசாம் மாநிலத்தில் தங்கியுள்ளனர். இவர்களில் 15-க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏக்கள் என்னுடன் தொடர்பில் உள்ளனர். அவர்களை கடத்தி வைத்துள்ளனர். அவர்கள் திரும்ப வர வேண்டும். மற்றொடு பிரிவினர் அறத்திற்கு மாறாக உள்ளனர் என்று முதலமைச்சர் உத்தவ் தாக்ரேவின் மகனும் அமைச்சருமான ஆதித்யா தாக்ரே தெரிவித்துள்ளார்.
 
மேலும், மகாராஷ்டிராவில் அதிருப்தி எம்.எல்.ஏக்கள். தங்களை லட்சத்திற்கும் கோடிக்கும் விற்றுவிட்டனர். காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சியினர் தங்களுக்கு துரோகம் செய்வார்கள் என பலர் எங்களிடம் கூறினர். ஆனால், சொந்த கட்சியினரே தங்களுக்கு துரோகம் செய்துவிட்டதாகவும் அவர் வேதனை தெரிவித்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சரிவு.. இன்று ஒரே நாளில் இவ்வளவா?

தயிர் வியாபாரியிடம் பணம் பறித்த விவகாரம்: சிறப்பு உதவி ஆய்வாளர் கைது..!

முத்தலாக்கில் இருந்து விடிவுகாலம் பிறந்திருக்கிறது.. தமிழிசை சௌந்தராஜன் பேட்டி

அடுத்த 3 மணி நேரத்தில் எத்தனை மாவட்டங்களில் கனமழை.. சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

மழை பெய்வதால் மின் தேவை குறைந்துள்ளது.. மின்சார துறை தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments