Webdunia - Bharat's app for daily news and videos

Install App

3 வயது நாய்க்கு டி என் ஏ சோதனை – மகாராஷ்டிராவில் நடந்த வினோத சம்பவம்!

Webdunia
செவ்வாய், 24 நவம்பர் 2020 (10:26 IST)
மகாராஷ்டிராவில் ஒரே நாய்க்கு இரண்டு நபர்கள் உரிமைக் கொண்டாடிய போது நாய்க்கு டி என் ஏ சோதனை வரை சென்றுள்ளது.

மகாராஷ்டிராவைச் சேர்ந்த ஹொசங்காபாத் பகுதியை சேர்ந்தவர் சதாப் கான். இவர் பத்திரிக்கையாளராக பணிபுரிந்து வருகிறார். இவரின் வளர்ப்பு நாயான கோகோ சில நாட்களுக்கு முன்னால் காணாமல் போக, அதுபற்றி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

சில நாட்களுக்கு பிறகு சிவ்ஹரி என்பவரது வீட்டில் தனது நாய் போலவே ஒரு நாய் இருப்பதாக கேள்விப்பட்டு தன் நாயைக் கேட்டுள்ளார். ஆனால் சிவ்ஹரியோ அது தன்னுடைய நாய் டைகர் எனக் கூறி தகராறு செய்துள்ளார். இந்த விஷயம் போலிஸாருக்கு செல்ல அங்கு சென்ற சதாப் தன் நாய்க்கு டி என் ஏ பரிசோதனை செய்யவேண்டும் எனக் கூறியுள்ளார்.

இதையடுத்து நாய்க்கு டிஎன்ஏ சோதனை செய்யப்பட்டு முடிவுகளுக்காக காத்திருக்கின்றனர் போலீஸார்.

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments