Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தொடரும் சஸ்பெண்ட் படலம்…! – திமுக எம்.பிக்கள் உட்பட 11 பேர் சஸ்பெண்ட்!

தொடரும் சஸ்பெண்ட் படலம்…! – திமுக எம்.பிக்கள் உட்பட 11 பேர் சஸ்பெண்ட்!
, செவ்வாய், 26 ஜூலை 2022 (14:52 IST)
இன்று நாடாளுமன்ற மக்களவை கூட்டத்தொடரில் அமளி செய்ததற்காக திமுக எம்.பிக்கள் உட்பட 11 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கி பரபரப்பாக நடந்து வருகின்றது. நாடாளுமன்ற கூட்டத்தொடர் தொடங்கியது முதலாகவே கேஸ் சிலிண்டர் விலை உயர்வு, உணவு பொருட்களுக்கு ஜிஎஸ்டி போன்றவற்றை எதிர்த்து காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் பாராளுமன்ற வளாகத்தில் போராட்டம் நடத்தின.

நேற்று நாடாளுமன்ற கூட்டத்தில் சபாநாயகரை சூழ்ந்து கொண்டு விலைவாசி உயர்வுக்கு எதிராக முழக்கம் எழுப்பியதால் காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி உட்பட 5 எம்.பிக்கள் இடைநீக்கம் செய்யப்பட்டனர்.

இந்நிலையில் இன்றும் மக்களவை கூட்டத்தில் விலைவாசி உயர்வு, ஜிஎஸ்டி, கேஸ் சிலிண்டர் விலை உயர்வு உள்ளிட்டவற்றிற்கு எதிராக எதிர்கட்சி எம்,.பிக்கள் அமளி செய்த நிலையில் திமுக எம்.பி.க்கள் என்.ஆர்.இளங்கோ, அப்துல்லா, சண்முகம், கிரிராஜன், கனிமொழி சோமு உள்பட 11 எம்.பி.க்கள் இந்த வாரம் முழுவதும் அவையில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்படுவதாக சபாநாயகர் ஓம் பிர்லா அறிவித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

குஜராத்தில் கள்ளச்சாராயம் குடித்து 26 பேர் உயிரிழப்பு - என்ன நடந்தது?