Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தமிழர்கள் என் சகோதரர்கள்.. அணை கட்ட அனுமதி குடுங்க! – டி.கே.சிவக்குமார்!

Advertiesment
TK Sivakumar
, வியாழன், 1 ஜூன் 2023 (16:11 IST)
காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணை கட்டும் கர்நாடகாவின் திட்டத்திற்கு தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் இதுகுறித்து கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் பேசியுள்ளார்.



கர்நாடகாவில் காங்கிரஸ் வெற்றி பெற்று சித்தராமையா முதல்வராகவும், டி.கே.சிவக்குமார் துணை முதல்வராகவும் பொறுப்பேற்றுள்ள நிலையில் நீண்ட நாளாக பேச்சு வழக்கில் இருக்கும் மேகதாது திட்டத்தை நிறைவேற்ற கர்நாடக அரசு முயற்சிகளை மேற்கொண்டுள்ளது.

இந்த மேகதாது திட்டம் தமிழர்களின் நீர் ஆதாரம் மற்றும் விவசாயத்தை வெகுவாக பாதிக்கும் என தமிழக அரசு இந்த திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்காமல் இருந்து வருகிறது. இந்நிலையில் இந்த திட்டத்தை செயல்படுத்த துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் தீவிரமாக இருப்பதை அமைச்சர் துரைமுருகன் உள்ளிட்ட பலரும் விமர்சித்துள்ளனர்.

இந்நிலையில் மேகதாது திட்டம் குறித்து பேசியுள்ள டி.கே.சிவக்குமார் “மேகதாது திட்டத்தை செயல்படுத்துவது குறித்து தமிழக அரசிடம் முறையிடுவேன். மேகதாதுவால் காவிரிப் படுகை விவசாயிகளுக்கு பாசனநீர், பொதுமக்களுக்கு குடிநீர் கிடைக்கும். தமிழ்நாட்டு மக்கள் மீது எனக்கு கோபமா, வெறுப்போ என்றுமே கிடையாது. அவர்களை என் சகோதரர்களாகவே நான் பார்க்கிறேன்” என பேசியுள்ளார்.

Edit by Prasanth.K

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அரசியலுக்கு வந்த பிறகு என்னிடம் 26 ஆடுகள் அதிகரித்துள்ளது: அண்ணாமலை