டெல்லி பாஜக மேயரை சந்தித்த கர்நாடக மாநில துணை முதலமைச்சர் டி.கே. சிவகுமார், டெல்லி மாநகராட்சி சிறப்பாக செயல்படுவதாகவும், இனி கர்நாடக மாநிலமும் டெல்லியைப் பின்பற்றி செயல்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
டெல்லி பாஜக மேயர் ராஜா இக்பால் அவர்களை இன்று கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே. சிவகுமார் சந்தித்தார். இந்த சந்திப்புக்குப் பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறிய போது, "டெல்லியில் கழிவு மேலாண்மை தொழில்நுட்பம் உள்ளது. அது மிகவும் சிறப்பாக இயங்கி வருகிறது. அதை நாங்களும் பின்பற்ற முயற்சி செய்வோம்," என்று தெரிவித்துள்ளார்.
"டெல்லி, கழிவுகளில் இருந்து மின்சாரம் தயாரிக்கிறது என்றும், இதன் மூலம் 25 மெகாவாட் யூனிட்டை வெற்றிகரமாக இயக்கி வருகிறது." இதை நேரில் பார்த்து ஆச்சரியப்பட்ட டி.கே. சிவகுமார், பெங்களூரில் கழிவுகளிலிருந்து மின்சாரம் தயாரிக்க நாங்கள் தவறிவிட்டோம். டெல்லி இந்த விஷயத்தில் சிறப்பாக செயல்படுகிறது. இனி பெங்களூரில் கழிவுகளிலிருந்து மின்சாரம் தயாரிக்கும் தொழில்நுட்பத்தைப் பின்பற்றுவோம்," என்று அவர் தெரிவித்துள்ளார்.
பாஜகவின் மேயராக இருந்தாலும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த துணை முதல்வர் டெல்லியின் திட்டத்தைப் பின்பற்றுவோம் என்று கூறி இருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.