Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அதென்ன பறவையின் எச்சமா? மோடியை கலாய்த்த குத்து ரம்யா!

Webdunia
வியாழன், 1 நவம்பர் 2018 (19:11 IST)
கர்நாடக மாநிலம் மண்டியா பாராளுமன்ற தொகுதி முன்னாள் எம்பியும், நடிகையுமான ரம்யா, மோடியின் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு அதை கேலி செய்துள்ளது தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 
 
இந்தியாவின் இரும்பு மனிதர் என அழைக்கப்படும் சர்தார் வல்லபாய் படேலின் சிலை குஜராத்தில் நேற்று மோடியால் திறந்து வைக்கப்பட்டது. 182 மீட்டர் உயரம் உள்ள இந்த சிலை உலகின் உயரமான சிலையாக உள்ளது.  
 
இந்த சிலைக்கு 'ஒற்றுமைக்கான சிலை' என பெயர் சூட்டப்பட்டு, ரூ.2,989 கோடி செலவில் கட்டப்பட்டிருக்கிறது. இந்நிலையில் காங்கிரஸை ரம்யா, நேற்று திறக்கப்பட்ட சர்தார் வல்லபாய் படேல் சிலைக்கு கீழ் நிற்கும் மோடியின் புகைப்படத்தை தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு இது என்ன பறவை எச்சமா? என கேலி செய்துள்ளார். 
 
இந்த பதிவு தற்போது வைரலாகியுள்ள நிலையில் பாஜகவினர் இதர்கு கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளனர். 9600 பேர் லைக் செய்துள்ளனர், 2,400 பேர் ரிட்விட் செய்துள்ளனர், 4500 பேர் கமெண்ட் செய்துள்ளனர். 

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments