Webdunia - Bharat's app for daily news and videos

Install App

'மனைவியை பிரிந்தவர்... உறவுகள் பற்றி அறியாதவர் மோடி'- சந்திரபாபு நாயுடு விமர்சனம்

Webdunia
திங்கள், 11 பிப்ரவரி 2019 (15:29 IST)
இன்னும் சில மாதங்களில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதற்காக எல்லா கட்சிகளும் தம் பிர்சாரத்தை துவங்கியுள்ளன.இந்நிலையில் ஒரு பக்கம் கூட்டணிக்கு வலுசேர்க்க பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றனர். சமீபத்தில் ஆந்திராவில் சுற்றுப்பயணம் செய்த பிரதமர் மோடி  அம்மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடுவை கடுமையாக விமர்சித்தார்.அப்போது  லோகேஸ் என்பவரின் தந்தைதான் சந்திரபாபு நாயுடு என்று பேசினார்.
இந்நிலையில் மோடியின் விமர்சனத்துக்கு பதிலளித்து, விஜயவாடாவில் நடந்த நிகழ்ச்சியில் சந்திரபாபு நாயுடு  பேசியதாவது:
 
எனது குடும்பத்தாரால் நான் பெருமை அடைகிறேன்.ஏனெனில் எனக்கு குடும்ப உறவு உள்ளது,ஆனால் பிரதமர் மோடியோ திருமணம் செய்து விட்டு மனைவியை பிரிந்து வாழ்கிறார். மேலும் மனைவியை விவாகரத்து செய்யாமலேயே பிரிந்து வாழுகிறார்.அவரது குருவான அத்வானியையே ஒதுக்கி வைத்தவர் தான் மோடி. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
 
பிரதமர் மோடிக்கும், சந்திரபாபு நாயுடுவுக்கும் இடையே வலுத்து வரும் இந்த காரசாரமாக விமரசனங்களால் தேசிய அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments