Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ரூ. 5க்கு உணவுப்பொட்டலம் விநியோகம்..ஆளுநர் தமிழிசை தொடங்கிவைத்தார்

ரூ. 5க்கு உணவுப்பொட்டலம் விநியோகம்..ஆளுநர் தமிழிசை  தொடங்கிவைத்தார்
, வெள்ளி, 30 ஏப்ரல் 2021 (23:47 IST)
இந்தியாவில் கொரோனா தொற்றின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. எனவே மக்களைத் இத் தொற்றிலிருந்து காக்க மத்திர அரசு மாநில அரசுகளுடன் இணைந்து பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது.

தமிழகம் உள்ளிட்ட ஒரு சில மாநிலங்களில் கொரொனா பரவலைத் தடுக்க  இரவு நேர ஊரடங்கு அமலில் உள்ளது.

,இந்நிலையில் பெரும்பாலான மக்கள் பசியிலும் பட்டிணியிலும் உள்ளனர், தற்போது குறிப்பிட்ட தொழில்கள் முடங்கியுள்ளதால், தொழிலதிபர்களும் ,தொழிலாளிகளும் பொருளாதாரப் பற்றாக்குறையில் உள்ளனர்.

இந்நிலையில் ஏழைகளுக்கு உதவி செய்யும் மனிதநேயமிக்க செயல்கள் தொடர்ந்து கொண்டுதான் உள்ளது.

அந்தவகையில்  புதுச்சேரியில் ரூ.5க்கு உணவுப்பொட்டலம் விநியோகித்து புதிய திட்டத்தை அம்மாநில துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தொடங்கிவைத்தார்.

அவரது செயலுக்கு வாழ்த்துகளும் பாராட்டுகள் குவிந்து வருகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சனி, ஞாயிறு விடுமுறை என்பதால் இன்றே இறைச்சி கடையில் குவிந்த கூட்டம்!