Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இருக்கை மாற்றுவதில் தகராறு! விமான அதிகாரியை அறைந்த பயணி! – நடுவானில் பரபரப்பு!

Webdunia
ஞாயிறு, 16 ஜூலை 2023 (10:26 IST)
டெல்லி வந்த ஏர் இந்தியா விமானத்தில் பயணித்த பயணி ஒருவர் விமான அதிகாரியை அறைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.



ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரிலிருந்து டெல்லிக்கு புறப்பட்டு வந்த ஏர் இந்தியா விமானத்தில் பயணிகள் பலர் பயணித்துள்ளனர். அப்போது பயணி ஒருவருக்கும், விமானத்தில் பயணித்த மூத்த ஏர் இந்தியா அதிகாரி ஒருவருக்கும் இருக்கை மாற்றிக் கொள்வதில் வாக்குவாதம் எழுந்துள்ளது.

இதில் ஆத்திரமடைந்த பயணி விமான அதிகாரியை கன்னத்தில் அறைந்துள்ளார். இதனால் விமானத்தில் பரபரப்பு எழுந்துள்ளது. பின்னர் விமானம் டெல்லியை வந்தடைந்ததும் தாக்குதல் நடத்திய பயணி காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

அதற்கு பின் அந்த பயணி மன்னிப்பு கடிதம் எழுதிக் கொடுத்து மன்னிப்பு கேட்டதால் விடுவிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நாங்க சட்டமன்றத்தில் பேசுவோம்.. உங்கள மாதிரி பட்டிமன்றத்தில் அல்ல! - சீமானுக்கு தவெக கொடுத்த அதிரடி பதில்!

காசாவை வாங்கவில்லை.. எடுத்துக்கப்போறோம்! ஒழுங்கா சொல்றதை செய்யணும்! - ஹமாஸ்க்கு ட்ரம்ப் எச்சரிக்கை!

அரசுப்பள்ளிகளில் பாலியல் குற்றங்கள் பெருகிவருவது ஏன் திரு. ஸ்டாலின்? வானதி சீனிவாசன் கேள்வி

செந்தில் பாலாஜி அமைச்சராக தொடர விரும்புகிறாரா? உச்சநீதிமன்றம் கேள்வி..!

அரசு பள்ளி சுவர் இடிந்ததால் பரபரப்பு.. மூன்று மாணவர்கள் படுகாயம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments