Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஊழியர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்திய காவலர் பணியிடை நீக்கம் !

Webdunia
வியாழன், 20 அக்டோபர் 2022 (19:31 IST)
பஞ்சாப் மாநிலம் அமிர்தரசில் மொபைல் கடையில் பணியாளர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்திய காவலர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

பஞ்சாப் மாநிலத்தில் பகவந்த் மான் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சியின் ஆட்சி நடந்து வருகிறது.

இம்மாநிலத்தில் அமிர்தரசில் உள்ள  ஒரு மொபைல் பழுதுபார்க்கும் கடை செயல்பட்டு வருகிறது. கடந்த  புதன் கிழமை இந்தக் கடைக்குள் சென்ற போலீஸ் காரர் ஒருவர், தன் கைத்துப்பாக்கியை எடுத்து, அங்கு பணியாற்றும் ஒரு ஊழியரை துப்பாக்கியால் சுட்டார்.
பின்னர், இன்னொரு நபரையும் போலீஸ்காரர் துப்பாக்கியால் சுட்டார். முதலில் சுட்ட நபர் உயிரிழந்ததைத் தொடர்ந்து, இவர் படுகாயம் அடைந்தார். அருகில் இருப்போர் இவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

இந்த நிலையில், இந்த சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள், மற்றும் உயிரிழந்த மற்றும் படுகாயம் அடைந்த நபர்களின் குடும்பத்தின் வாக்குமூலத்தின்படி வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்யப்படுவதாக அமிர்தரஸ் வடக்கு ஏசிபி வரீந்தர் சிங் கூறியுள்ளதாக செய்திகள் வெளியாகிறது.

Edited by Sinoj

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காலி நிலம் வைத்திருப்பவர்களுக்கு கட்டுப்பாடு.. பின்பற்றாவிட்டால் அபராதம்: சென்னை மாநகராட்சி..!

சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்தாரா டிரம்ப்? மஸ்க் நீக்கிய பதிவால் பரபரப்பு..!

பொது இடத்தில் ஒட்டகம், மாடு பலி கொடுத்தால் நடவடிக்கை.. பக்ரீத்தை முன்னிட்டு பாஜக அரசு உத்தரவு..!

தண்ணீர் வற்றி மணல் தெரியும் ஆறுகள்.. சிந்து நதிநீர் இல்லாததால் பாலைவனமாகும் பாகிஸ்தான்..!

உதயநிதிக்கு துணை பொதுச்செயலாளர் பதவி வழங்காததால் அதிருப்தி: ஆர்பி உதயகுமார்

அடுத்த கட்டுரையில்
Show comments